Sarathkumar: வயது குறித்து கே.எஸ்.ரவிகுமார் கேள்வி.. ஷாக்கான சரத்குமார்!

Sarathkumar And Devayanis 3BHK : தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்துவந்தவர் சரத்குமார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் 3BHK. இந்த படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு, அதிர்ச்சியான சரத்குமார் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sarathkumar: வயது குறித்து கே.எஸ்.ரவிகுமார் கேள்வி.. ஷாக்கான சரத்குமார்!

சரத்குமார் மற்றும் தேவயானி

Published: 

28 Jun 2025 07:30 AM

நடிகர் சரத்குமார் (Sarathkumar) தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் 90ஸ் மாற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து இவரின் படங்ககளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் குறைய தொடங்கிய நிலையில், மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். அப்போதும் விடாமல் முன்னணி கதாநாயகனாகவும் படங்களிலும் நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. மேலும் நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan) மற்றும் சரத்குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியானபடம் போர் தொழில் (por thozhil). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இப்படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சித்தார்த் (Siddharth) மற்றும் சரத்குமாரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் 3 BHK. இந்த படத்தின் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் , தேவயானி (Devayani), சித்தார்த்துடன் கலந்துகொண்டார். இந்த நேர்காணலில் தொகுப்பாளராக கே.எஸ். ரவிக்குமார் (KS Ravikumar) தொகுத்த நிலையில், சரத்குமார் வயதான கதாபாத்திரத்தில் நடித்ததை பற்றி அவர் பேசியிருந்தார், உடனே ஷாக்கான சரத்குமார், யாரை நீங்கள் கூறுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். மேலும் அவர்என்ன சொன்ன என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

சரத்குமார் மற்றும் தேவயானியின் 3BHK பட ட்ரெய்லர் :

சரத்குமார் மற்றும் தேவயானி பேசிய விஷயம் :

சமீபத்தில் 3BHK தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், தேவயானி மற்றும் சித்தார்த் கலந்துகொண்டனர். அதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தொகுப்பாளராக தொகுத்திருந்தார். அதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் , “சூர்ய வம்சம் படத்தில் நீங்கள் இருவரும் இளம் ஜோடிகளாக நடித்திருந்தீர்கள், ஆனால் இப்படத்தில் வயதான ஜோடிகளாக நடித்திருக்கிறீர்கள்?” என்று பேசியிருந்தார். அதற்கு சரத்குமாரும் தேவயானியும், “நீங்கள் யாரை கூறுகிறீர்கள், வயதானது என்றால் என்ன அர்த்தம் ? என்று கேட்டிருந்தனர். அதற்கு கே.எஸ். ரவிக்குமார், “ஐய்யோ இந்த 3BHK படத்தில் உங்களின் கதாபாத்திரம் அவ்வாறுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதற்க்கு சரத்குமார், “அதுவா, நீங்கள் எங்களின் வயதை பற்றி பேசுகிறீர்களோ என்று நினைத்தோம், இந்த 3BHK படத்தில் 20 வயதுமுதல் 80 வயதுவரை உள்ள கதாபாத்திரத்தில், நானும் தேவயானியும் நடித்திருக்கிறோம், நீங்கள் எவ்வாறு வயதான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருக்கிறோம் என்று கூறலாம்?” என சரத்குமார் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு கே.எஸ். ரவிக்குமார், “நான் படத்தில் உங்களின் கதாபாத்திரம் பற்றித்தான் பேசினேன் வேறு எதுவுமில்லை என்று கூறியிந்தார்.

மேலும் பேசிய நடிகை தேவயானி, “இந்த படத்தில் சரத்குமார் , மகன், அப்பா மற்றும் தாத்தா போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.