Cinema Rewind : சென்னைக்கு வர பயமாக இருந்தது – படையப்பா குறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன்!
Ramya Krishnan Talk About Padayappa Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் சூப்பர் ஸ்டார் முதல் கமல் வரை, பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் படையப்பா படத்தில் வாய்ப்பிருந்தால் நடிகையாக நடித்திருப்பேன் என்று பேசியுள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் நடிகர்கள் கமல் ஹாசன் (Kamal Haasan) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாகப் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் நடித்ததில் தரமான திரைப்படமாக அமைந்தது படையப்பா (Padayappa) படம் என்று கூறலாம்.
அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கே வில்லியாக (villain) நடித்து அசத்தியிருந்தார். கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் (KS Ravikumar) இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார்.
ரம்யா கிருஷ்ணனின் போட்டோஷூட்
மேலும் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனும் (Sivaji Ganesa) இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி இன்றுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பு குறிப்பாக, ரஜினிகாந்த், சிவாஜி கணேஷின், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யாவின் நடிப்பு என இப்படத்தில் தரமான நடிகர்களின் கூட்டணி வேலை செய்திருந்தது.
இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயமாகக் கதாநாயகியாகத்தான் நடித்திருப்பேன் என்று பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
ரம்யா கிருஷ்ணன் படையப்பா படம் பற்றி பேச்சு :
முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் படையப்பா படத்தில் நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நாடியை ரம்யா கிருஷ்ணன், “எனக்குக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நிச்சயமாகச் சவுந்தரியா நடித்திருந்த கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஏனென்றால் எந்தத் நடிகையும் ரஜினிகாந்த் சாருக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் மற்றும் நெகடிவ் ரோலில் ஒரு நடிகை நடிப்பதற்கு யோசிப்பார்கள். இந்த நடிகையும் அவ்வாறு நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
மேலும் அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை ஷூட் செய்யும்போது எங்கிருந்த இளையவர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் என்னிடம் வந்து, நீங்கள் கொஞ்சநாள் சென்னைக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். மேலும் இந்த படத்தின் ரிலீஸின்போது நான் சென்னையில் இல்லைதான், எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மேலும் இப்படத்தின் ரிலீஸின் பொது திரையரங்குகளில் ஸ்கிரீன் எல்லாம் கிழிந்தது என்றும் என்னிடம் பலரும் கூறினார்கள்” என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓபனாக பேசியிருந்தார்.