ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்… இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
Director Karthik Subbaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்க்நர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் விமர்சகர்களால் படங்கள் பாதிக்கப்படுவது குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) சமீபத்தில் சில விமர்சகர்களால் படங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அந்தப் பேட்டியில் பேசியதாவது, சமீப காலமாக படங்களை விமர்சிப்பவர்களை விட அந்த கலையையும் கலைஞர்களையும் வெறுக்க வைக்கும் முயற்சிகளிலேயே பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நடிகரின் அல்லது இயக்குநரின் படம் வருகின்றது என்றால் குறிப்பிட்ட சிலர் அந்தப் படத்தை ஓடவிடாமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பணம் செலவு செய்கிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வருகிறது என்றால் அதனை கூறியவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த மாதிரியான செயல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்திற்கும் அது நடந்தது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். படம் வெளியாகி 2-வது வாரம் 3-வது வாரம் திரையரங்குக்கு செல்லும் போது அங்கு படம் பார்த்த ரசிகர்கள் படம் நல்லா இல்லை என்று முன்பு சொன்னதால் படத்தை பார்க்காமல் விட்டோம்.
சிலர் படம் சிறப்பாக இருக்கிறது என்றதும் சரி போய் பார்போம் என்று வந்தோம். படம் நல்லா இருக்கு ஏன் இந்த மாதிரியான கலவையான விமர்சனங்கள் வருகிறது என்று கூறியதாக கார்த்திக் சுப்பராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான் என்றும் கார்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் பேச்சு:
“Now days PAID HATRED is happening for the films. They have a separate office & working on full time. I’m experiencing this in New. During #RETRO theatre visit, the audience had enjoyed and told me film was good, but they wondered about mixed talks”
– KSpic.twitter.com/GRCcQkTsol— AmuthaBharathi (@CinemaWithAB) June 17, 2025
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படம்:
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.