நடிகர் அதர்வா நடிப்பில் வெளியானது டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்!

DNA - Official Trailer | நடிகர் அதர்வா நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வரிசைக்கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் டிஎன்ஏ. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியானது டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்!

டிஎன்ஏ

Published: 

11 Jun 2025 12:19 PM

நடிகர் அதர்வா (Actor Atharvaa Murali) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டிஎன்ஏ. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இணைந்து ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பணியாற்றி உள்ளனர். மேலும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் உடன் இணைந்து அம்பேத்குமார் தயாரித்துள்ளார். படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்:

ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்… சாபத்தின் இரண்டு பக்கங்கள்… நன்மைக்கு இரண்டு பக்கங்கள்… என்று ஒரு விசயத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளது என்பதை உணர்த்த இதனைக் காட்டுகின்றனர். பிறகு அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இருவருக்கு குடும்பத்தினர் இணைந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை தங்களுடையது இல்லை என்று நிமிஷா சஜயன் நினைக்கிறார். மருத்துவ டெஸ்டில் குழந்தை அவர்களுடையது தான் என்று தெரிவித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார் நிமிஷா. ஆனால் குடும்பத்தினரும், மருத்துவர்களும் அவருக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மன அழுத்தம் என்று கூறுகின்றனர்.

டிஎன்ஏ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஆனால் நிமிஷாவின் கணவர் அதர்வா மட்டும் அவர் கூறுவதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை ஆராயா முயற்சி செய்து வருகிறார். பின்பு என்ன நடந்தது என்பது படம் வெளியான பிறகே தெரியும். வித்யாசமான கதையம்சத்தை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.