காவிரியில் முதலை? வைரல் வீடியோவால் மக்கள் பீதி
கும்பகோணம் பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கி கிடக்கும் குறைந்த நீரில் முதலை இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. டெல்டா பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமான காவிரி, தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் வெளியான இந்த வீடியோ, காவிரி கரையோர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆற்றில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகள் செய்ய வரும் பக்தர்களும் பீதியடைந்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us
