வீட்டிற்குள் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை
உதகை அருகேயுள்ள மாயார் கிராமத்தில் செல்வப்பா காலனி குடியிருப்பு பகுதியில் சிவகுமார் என்பவர் வீட்டிற்குள் நாயை விரட்டி வந்த சிறுத்தை ஒன்று இரவு 10 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்தது.வீட்டில் உரிமையாளர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி கதவை வெளிப்புறமாக பூட்டினார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாயார் கிராமத்தில் நாயை வேட்டையாட விரட்டி வந்து குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகை அருகேயுள்ள மாயார் கிராமத்தில் செல்வப்பா காலனி குடியிருப்பு பகுதியில் சிவகுமார் என்பவர் வீட்டிற்குள் நாயை விரட்டி வந்த சிறுத்தை ஒன்று இரவு 10 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்தது.வீட்டில் உரிமையாளர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி கதவை வெளிப்புறமாக பூட்டினார். இதைத் தொடர்ந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து நள்ளிரவில் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
Follow Us
