அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி..!

Dec 23, 2025 | 10:34 PM

மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார். 

மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார்.