கோவை: காட்டுக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற சிறுத்தை… மண்டை ஓடு மீட்பால் தாய் கதறல்…

Valparai Tragedy: கோவை அருகே வால்பாறையில் உள்ள பச்சைமலை தேயிலை தோட்டத்தில், 6 வயது சிறுமி ரோஷினி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். தாயுடன் தண்ணீர் எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. வனத்துறையும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: காட்டுக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற சிறுத்தை... மண்டை ஓடு மீட்பால் தாய் கதறல்...

உயிரிழந்த சிறுமி

Updated On: 

21 Jun 2025 06:39 AM

கோவை ஜூன் 21: கோவையில் வால்பாறை (Coimbatore, Valparai) பச்சைமலை தேயிலை தோட்டத்தில் (At the Pachamamalai Tea Garden) , ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரோஷினியை (6-year-old girl Roshini) சிறுத்தை காட்டிற்குள் இழுத்துச் சென்றது. தாயுடன் தண்ணீர் எடுக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பகுதி மக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை மற்றும் போலீசார் தேடுதல் பணியில் (Forest Department and police are on a search operation) ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் மண்டை ஓடு மட்டும் புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடமும் இதேபோன்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு முறைகள் குறித்து மக்கள் வனத்துறையை கண்டித்து, உடனடி நடவடிக்கைகளை கோருகின்றனர்.

தாயின் கண்முன் சிறுமியை இழுத்துச்சென்ற சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள பச்சைமலை தேயிலை தோட்டத்தில், வடமாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரோஷினி சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 20ஆம் தேதி மாலை, தாயுடன் தண்ணீர் எடுக்கும் பணியில் இருந்தபோது, பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்றது.

அச்சம், அலறல், தேடல்… மண்டை ஓடு மட்டும் மீட்பு

தாயின் அலறலுக்கு பிறகு கூடிய தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து விரைவாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுமியின் உடலின் முழுப் பாகங்கள் காணாமல் போன நிலையில், மழை காரணமாக தேடுதல் பணிகள் சிரமமாக நடைபெறுகின்றன. சிறுமியின் மண்டை ஓடு மட்டும் காணப்பட்டதால், உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.

தாயின் கண்முன்னே குழந்தையைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

பாதுகாப்பு இல்லை – மக்களின் குற்றச்சாட்டு

இந்தச் சம்பவம், வனத்துறை பாதுகாப்பு குறைவாக இருப்பதாக மக்களிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பல ஆண்டுகளாக வால்பாறையில் யானை மற்றும் சிறுத்தை தாக்குதல்கள் அதிகரித்து வருவதும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குடிசை வாழ்க்கை – உயிருக்கு பேராபத்து

இந்த பகுதியில் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 35,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறையாக கோவையில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். வனப்பகுதி அருகே குடிசையில் வாழும் இவர்கள், வனவிலங்குகளின் தாக்குதலுக்கு அடிக்கடி பலியாகிறார்கள்.

தீவிர நடவடிக்கைகள் தேவையென மக்கள் கோரிக்கை

வனவிலங்குகளின் அட்டகாசங்களை தடுக்க, பாதுகாப்பு வளையங்கள், ஒளி வீச்சு மின்வேலி மற்றும் பாதுகாப்பான நடைபாதைகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். சிறுமி ரோஷினியின் உயிரிழப்பு வால்பாறை மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் உடலை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சவால்கள் உள்ளன என்றாலும், விசாரணை மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.