சென்னை: இன்று 24 நிமிட இடைவெளியில் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும்…
Chennai Metro Delay: சென்னையில் கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செயிண்ட் தாமஸ் மவுண்ட் - சென்னை சென்ட்ரல் இடையேயான நேரடி ரயில் சேவை 24 நிமிட இடைவெளியில் மட்டுமே இயங்குகிறது. மற்ற பகுதிகளில் வழக்கமான சேவை தொடர்கிறது.

சென்னை ஜூன் 25: சென்னையில் (Chennai) கோயம்பேடு மற்றும் அசோக் நகர் (Koyambedu and Ashok Nagar) இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் (Delay in metro rail service) ஏற்பட்டுள்ளது. இதனால் செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நேரடி ரயில் சேவை 24 நிமிட இடைவெளியில் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களுக்கு வழக்கமான சேவை தொடருகிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதியிலும் இதுபோல் கோளாறு ஏற்பட்டது. மக்கள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகனப் போக்குவரமும் அதிகரித்து வரும் நிலையில், பொதுப் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், மெட்ரோ ரயில் சேவை பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக வலம் வருகிறது.




கோயம்பேடு – அசோக் நகர் இடையே கோளாறு
இன்று காலை, பச்சை நிற மெட்ரோ வழித்தடத்தில் கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நேரடி சேவைகள் 24 நிமிட இடைவெளியில் மட்டுமே இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
மாற்றீடு செய்யப்பட்ட சேவை விவரங்கள்
சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை, அசோக் நகர் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை வழக்கமான மெட்ரோ சேவைகள் இயங்குவதாகவும், நீலம் வழித்தடத்தில் எந்தவித பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
Due to Technical Failure between Koyambedu and Ashok Nagar, direct train service between St. Thomas Mount and Chennai Central
station are running with 24 mins frequency.
However, normal services are maintained between Chennai Central and Koyambedu and
From Ashok Nagar and St.…— Chennai Metro Rail (@cmrlofficial) June 25, 2025
தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகள்
இதேபோல், கடந்த 2025 ஜூன் 20ம் தேதி விம்கோ நகர் மற்றும் டோல்கேட் இடையே ஏற்பட்ட கோளாறும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், இன்றும் மெட்ரோ சேவையில் ஏற்பட்ட தடங்கல் பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரம்
மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் வகையில், 63,466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிமீ தூரத்திற்கு மூன்று புதிய வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது எழும்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ சேவை இயங்கிவருகிறது.
அறிவுறுத்தல் மற்றும் மன்னிப்பு
இந்நிலையில், பயணிகள் தங்கள் பயணங்களை முறையாக திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.