அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்.. இன்னும் செய்வோம் – சிங்கார சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
உள்கட்டமைப்பு மேம்பாடு, பாலங்கள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்ற திட்டங்களும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 14, 2026: அரை நூற்றாண்டு வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதோடு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்கட்டமைப்பு மேம்பாடு, பாலங்கள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்ற திட்டங்களும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: லஞ்ச புகார்.. சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த ஊழல் தடுப்பு போலீசார்.. அடுத்து நடந்த சம்பவம்!
அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்:
சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள #DravidianModel!
🔷 பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)
🔷 பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்
🔷 மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்
🔷 பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி
🔷 குடிநீர்த் திட்டப்… pic.twitter.com/9bnC4fn41f
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 13, 2026
இந்த நிலையில், சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரை நூற்றாண்டு வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது: “சென்னையில் அரை நூற்றாண்டு வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி. மொத்தம் 36 பாலங்கள் அமைக்கும் திட்டத்தில் 19 மேம்பாலங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் 17 பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
சிங்கார சென்னையின் உட்கட்டமைப்பு:
அதேபோல் பூங்காக்கள் மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைப்புகள், பள்ளிகள் மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாடு, வட சென்னை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தவிர முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், புதிய விளையாட்டு அரங்கங்கள், நவீன வசதிகளுடன் கூடிய நகர மாளிகைகள், புதிய வடிவமைப்பில் பேருந்து நிலையங்கள், தாழ்த்தள (low-floor) பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சென்னையின் தோற்றம் மாற்றம் பெற்றுள்ளது.
இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, உலகத் தரமான உள்கட்டமைப்புடன் கூடிய எழில்மிகு சென்னையை 2030க்குள் உருவாக்குவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.