ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000.. மிஸ் பண்ணாதீங்க!
Haj Pilgrims : முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மானிய தொகை தமிழக அரசு வழங்குகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் 2025 மே 10ஆம் தேதியான நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,650 பேர் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

சென்னை, மே 11 : முதல்முறையாக தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் (Haj Pilgrims) மேற்கொள்ளும் நபர்களுக்கு ரூ.25,000 மானியம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025 மே 10ஆம் தேதியான நேற்று தொடங்கி வைத்தார். நேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 10 பேருக்கு தலா ரூ.25,000 காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் மொத்தம் 5,650 முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ள தகுதியுடையவர்கள் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் போறீங்களா?
இஸ்லாமியர்களில் மிக முக்கிய கடைகளில் ஒன்றாக இருப்பது ஹஜ் பயணம். ஹஜ் பயணத்தை தங்களது வாழ்நாளில் ஒருமுறையாக இஸ்லாயர்கள் மேற்கொள்வார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்னோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பயணம் மேற்கொள்வார்கள்.
குறிப்பாக, தமிழககத்தில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தமிழக அரசு மானியம் தொகை வழங்குவதை தொடங்கியுள்ளது. அதாவது, தமிழகத்தில் இருந்து முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தகுதியுள்ள முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தகுதியுடையவர்களுக்கு 2025ஆம் ஆண்டு முதல் ரூ.25,000 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.14.12 கோடி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், தமிழக அரசு 2025 மே 10ஆம் தேதி முதல் ஹஜ் யாத்ரீகளுக்கு ரூ.25000 மானியத் தொகையை வழங்கப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 10 நபர்களுக்கு ரூ.25,000 மானியத் தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்
முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகை – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழங்கினார்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @Udhaystalin pic.twitter.com/rZXI6UAlrj
— TN DIPR (@TNDIPRNEWS) May 10, 2025
இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உடன் இருந்தனர். 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து முதல்முறையாக செல்லும் 5,650 பேருக்கு தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் முதல்முறையாக ஹேஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.