சாகித்ய அகடாமி விருது.. விஷ்ணுபுரம் சரவணனுக்கு ’பால புரஸ்கார், லக்ஷிமிகஹருக்கு ‘யுவ புரஸ்கார்’
Sahitya Akademi Award : 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கர் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒற்றை சிறகு ஓவியா என்ற சிறார் நாவலுக்கான அவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 18 : 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை (Sahitya Akademi Award) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், பால சாகித்ய புரஸ்கார் விருது (Bal Puraskar Award) விஷ்ணுபுரம் சரவணனுக்கும், யுவ சாகித்ய புரஸ்கார் விருது (Yuva Puraskar Award) லட்சுமிஹருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தும் எழுத்தாளர்கள் அங்கீகரிக்கும் விதமான மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 24 மொழிகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கான இலக்கிய படைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போல, யுவு புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பால சாகித்ய புரஸ்கார் விருது ’ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற படைப்புக்கு விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யுவ புரஸ்கார் விருது ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு
#साहित्यअकादेमी युवा पुरस्कार 2025, तमिऴ भाषा में कहानी “कुट्टोन्रु कुटिर्रू”, लाटशमिहर की कृति चयनित ।#SahityaAkademi Yuva Puraskar 2025, in Tamil to Short Stories Kuttonru Kutirru by Latshmihar.#बालसाहित्य #BalSahitya #ChildrenLiterature@rashtrapatibhvn @PMOIndia… pic.twitter.com/ymbtREF6HE
— Sahitya Akademi (@sahityaakademi) June 18, 2025
இந்து விருதுகளுடன் ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் எழுத்தளார் லட்சுமிஹர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது எக்ஸ் தளத்தில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக பால சாகித்ய புரேஷ்கர் பெற தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று யுவ புரஷ்கர் விருது பெறத் தேர்வாகி இருக்கும் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினைப் பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் வாழ்த்துகிறேன்” என இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.