Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. 5 தனிப்படைகள் அமைத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய நடவடிக்கை..

Drug Abduction Case: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர், நடிகர் கிருஷ்ணாவின் தொலைப்பேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால அவர் இருக்கு இடம் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. 5 தனிப்படைகள் அமைத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய நடவடிக்கை..
நடிகர் கிருஷ்ணா
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Jun 2025 13:25 PM

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவையும் கைது செய்வதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பார் மோதல் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உட்பட 11 பேரை கைது செய்தனர். பின்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரசாத் நண்பர் பிரதீப் மற்றும் ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் பிரசாத்திற்கு போதை பொருள் வழங்கியதாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பிரதீப்பையும் ஜானையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கடத்தலில்  ஈடுபட்டதாக தெரியவந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த அளித்த பகீர் வாக்குமூலம்:

இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணை மேற்கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவர் போதைப் பொருள் எடுத்துள்ளதாக உறுதி ஆனது.

இதனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “ அவர் தவறு செய்து விட்டேன். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். அவர் எனக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பணம் கேட்கும் போதெல்லாம் எனக்கு கொக்கைன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தினார்.

3 முறை எனக்கு கொக்கைன் கொடுத்துள்ளார். அதன் பின் நானே அவரிடம் கேட்டு வாங்கும் அளவிற்கு அடிமையானேன். நான் செய்தது தவறு தான்” என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையின் போது, நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

5 தனிப்படைகள் அமைத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய நடவடிக்கை:

ஏற்கனவே ஒரு தனிப்படை போலிசார் கேரளாவில் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது.

நடிகர் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.