கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. ஜூலை 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ..
Tamil Nadu Weather Update: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஜூன் 25, 2025 தேதியான இன்று மிக கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1, 2025 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில் ஜூன் 25 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, சின்கோனா, சோலையார், நீலகிரி மாவட்டம் பார்சன் வேலி ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, மேல் பவானி ஆகிய இடங்களில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூன் 26 2025 தேதியான நாளை தமிழகத்தில் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை நாளையும் (ஜூன் 26,2025) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனீ மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/xFjcjBgIzi— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 25, 2025
அதேபோல் ஜூன் 29 2025 முதல் ஜூலை 1, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது ஒரு சில இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நாரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவானது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து நாகையில் 38.2 டிகிரி செல்சியசும், மதுரையில் 38 டிகிரி செல்சியசும், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.8 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.