2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. டெல்டாவில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட் என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதே சமயத்தில், நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. டெல்டாவில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ரிப்போர்ட் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Feb 2026 15:20 PM

 IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 5, 2026: தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்த சூழலில், வரக்கூடிய அடுத்த ஒரு சில நாட்களுக்கும் வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 5, 2026 தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஏனைய தமிழக முழுவதிலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்:

இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இல்லாமல் நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: திறந்திருக்கும் தவெகவின் கூட்டணி வாசல் கதவு..பிரம்மாண்ட ஆஃபருடன் காங்கிரஸுக்கு அழைப்பு?விஜயின் பலே பிளான்!

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இரவு நேரம் அல்லது அதிகாலை வேளையில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காகம் இறந்து கிடந்த விவகாரம்…சென்னையில் பறவை காய்ச்சல் பரவல்..கால்நடைத்துறை எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதே சமயத்தில், நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..