மழைக்கு ரெடியா மக்களே! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை..

Tamil Nadu Weather Update: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 13, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது

மழைக்கு ரெடியா மக்களே! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Sep 2025 14:43 PM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 13, 2025: வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளில் உள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடுத்து வரும் இரண்டு தினங்களில் கடந்து செல்லக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 13, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 14, 2025 அன்று தமிழகத்தில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விதிகளை மீறும் தொண்டர்கள்.. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு!

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

  • செப்டம்பர் 16, 2025 அன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • செப்டம்பர் 17, 2025 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
  • செப்டம்பர் 18, 2025 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
  • செப்டம்பர் 19, 2025 அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர் மழை இருக்கும் காரணத்தால் வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மழையின் தாக்கத்தால் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அருகில் நிலைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.