காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…
Greater Chennai Corporation: சென்னை மாநகராட்சி, காலி நில உரிமையாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நிலங்களைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் எனவும், செடிகள், குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்க விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான வேலி கட்ட வேண்டியதும் கட்டாயம்.

சென்னை ஜூன் 08: சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலி நிலங்களை வைத்திருப்பவர்கள் (Vacant Landowners) அவற்றை சீராக பராமரிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செடிகள், குப்பைகள், மழைநீர் தேங்கல் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பான வேலி கட்டுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்த மீறல்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். திடக்கழிவு மற்றும் கட்டிடத் தூள்களை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத்தை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் அவசியம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலி நிலங்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை மீறுவோருக்கு முதல் கட்டமாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து மீறல் ஏற்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://chennaicorporation.gov.in/gcc/vacant_land_owners/Vacant%20Land%20Guide%20Lines%20Notice_English.pdf




வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
காலி நிலங்களில் செடிகள், மண்டுதல், குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிடத் தூள் மற்றும் திடக்கழிவுகள் தேங்கக் கூடாது; அவற்றை எரிக்கவும் அனுமதிக்கப்படாது. மேலெழும் செடிகளை அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
வணக்கம் #Chennaiites 🙏
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் மேலாண்மை, சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், இன்று… pic.twitter.com/s6dQ6YUkt1
— Greater Chennai Corporation (@chennaicorp) June 7, 2025
பாதுகாப்பான வேலி கட்டல் அவசியம்
காலி நிலத்தின் எல்லையை சுற்றி உறுதியான மற்றும் பாதுகாப்பான வேலியை கட்ட வேண்டும். இது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார ரீதியாக முக்கியமானது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கம்
நிலம் உரிய பராமரிப்பின்றி இருந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பொதுநலனைக் கருத்தில் கொண்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட நில பராமரிப்பு அவசியம் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation)
சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) இந்தியாவின் மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். 1688-ம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வமைப்பு, தற்போது ரிப்பன் கட்டிடத்தில் தலைமையகத்துடன் செயல்பட்டு வருகிறது. நகரின் சாலை, மழைநீர் வடிகால், குப்பை மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிர்வகிக்கிறது.
200 வார்டுகள் கொண்ட நகராட்சி மன்றம், மேயரும் ஆணையரும் இணைந்து நிர்வாகத்தை மேற்கொள்கின்றனர். சமீபத்தில், காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு சுத்தம் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.