Women’s World Cup Final: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2025 உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டி, பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்தது

Women’s World Cup Final: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

மகளிர் கிரிக்கெட் அணி

Updated On: 

03 Nov 2025 07:37 AM

 IST

பெண்கள் கிரிக்கெட் உலகம் தற்போது ஒரு புதிய சாம்பியனைப் பெற்றுள்ளது. 2025, நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது. அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டது. இந்திய மகளிர் அணி மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு கணிசமான பரிசுத் தொகையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டார்.

பிசிசிஐ என்ன அறிவித்தது?

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது. வாரியம் ஒரு குறிப்பிடத்தக்க வெகுமதியையும் அறிவித்துள்ளது. ANI இடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “ஜெய் ஷா பிசிசிஐ-யின் பொறுப்பேற்றதிலிருந்து, பெண்கள் கிரிக்கெட்டில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். சம்பள சமத்துவமும் இதில் கவனிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஐசிசி தலைவர் ஜெய் ஷா பெண்களுக்கான பரிசுத் தொகையை 300% அதிகரித்தார்.

Also Read : ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

வீடியோ

முந்தைய பரிசுத் தொகை $2.88 மில்லியனாக இருந்தது, அது இப்போது $14 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பெண்கள் கிரிக்கெட் ஆர்வத்தை கணிசமாக உயர்த்தியுள்ளன.” என்றார். மேலும், பிசிசிஐ, வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என முழு அணிக்கும் ₹51 கோடி வெகுமதியை பிசிசிஐ அறிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சாம்பியன் ஆன பிறகு இந்திய அணிக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

இந்த ஆண்டு, மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 4.48 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 41.77 கோடி) பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு 2.24 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 21.88 கோடி) பரிசு வழங்கப்பட்டது. கூடுதலாக, ஒவ்வொரு அணிக்கும் ஏற்கனவே 250,000 டாலர் (தோராயமாக ரூ. 2 கோடி) பரிசு உறுதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் லீக் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றிக்கும் 34,314 டாலர் (தோராயமாக ரூ. 28 லட்சம்) பரிசு வழங்கப்படும்.

Also Read : இது வெற்றியின் கண்ணீர்.. தந்தையை கட்டிப்பிடித்த கலங்கிய ஜெமிமா!

எந்த அணிக்கு எவ்வளவு தொகை?

  • ஆஸ்திரேலியா: ரூ. 11.95 கோடி
  • இங்கிலாந்து: ரூ. 11.95 கோடி
  • இலங்கை: ரூ. 7.8 கோடி
  • நியூசிலாந்து: ரூ 7.8 கோடி
  • வங்கதேசம்: ரூ. 4.5 கோடி
  • பாகிஸ்தான்: ரூ. 4.5 கோடி
Related Stories
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?
India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் கண்ணாடி பாட்டில்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்