IPL 2026: 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இணைய விரும்பிய சாம்சன்.. ருதுராஜ் கெய்க்வாட் சுவாரஸ்ய தகவல்!
Sanju Samson: கடந்த 2025 ஐபிஎல் சீசன் வரை, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025க்குப் பிறகு, அந்த அணியை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்து, ஜடேஜாவை வாங்கியது.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல்லில் 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் (Chennai Super Kings) களமிறங்கும்போது, நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனின் (Sanju Samson) ஐபிஎல் வாழ்க்கையில் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. தனது விளையாட்டு வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, கடந்த சில சீசன்களாக அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்த சாம்சன், அந்த அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகிறார். இதன் மூலம், கடந்த 3 ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் மனதில் கொண்டிருந்த, சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வா? கடைசி போட்டியை எங்கு, யாருடன் விளையாடுவார்?
வீரராக சஞ்சு சாம்சன்:
கடந்த 2025 ஐபிஎல் சீசன் வரை, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025க்குப் பிறகு, அந்த அணியை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்து, ஜடேஜாவை வாங்கியது. கடந்த 2025 சீசனின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் இருந்த பல பிரச்சனைகளால் சஞ்சு அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. உண்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சென்னை கேப்டன் கெய்க்வாட் வெளிப்படுத்திய ஒரு தகவல் இந்த விவகாரத்திற்கு ஒரு புதிய திருப்பத்தை அளித்துள்ளது.
சஞ்சுவைப் பற்றி கெய்க்வாட் என்ன சொன்னார்?
சூப்பர் கிங்ஸின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு பேட்டியில், ருதுராஜ் கெய்க்வாட், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாம்சன் சிஎஸ்கே அணியில் சேர விருப்பம் தெரிவித்தபோது, அவரிடம் பேசியதாகவும், கெய்க்வாட்டே அவரை ஊக்குவித்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், ”ஒரு முறை சஞ்சு சாம்சன் என்னிடம் கேட்டார், ‘மஹி பாய் எப்படி இருக்கிறார்? CSK-வில் இணைவதற்கு முன்பு, சஞ்சு சாம்சன் என்னுடன் தொடர்ந்து உரையாடி வந்தார்.
நான் அப்போது சஞ்சு சாம்சனிடம், ‘உங்களுக்கு கேப்டன் பதவி வேண்டும் எனில் எடுத்து கொள்ளுங்கள். நான் உங்களின் தலைமையின்கீழ் விளையாட தயார்’ என்று கூறினார். அவர் என்னிடம், ’எனக்கு கேப்டன் பதவி வேண்டாம். நான் உங்கள் தலைமையில் விளையாட மட்டுமே விரும்புகிறேன். இது உங்கள் அணியாகும்’ என்று கூறினார்.
ALSO READ: கைகளில் கருப்பு பட்டை.. RCB vs SRH போட்டியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
சாம்சன் ராஜஸ்தானில் எத்தனை ஆண்டுகள் விளையாடியுள்ளார்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு வர்த்தகம் செய்தபோது, அவரது கனவு இறுதியாக நனவானது. இதற்குப் பதிலாக, ராஜஸ்தான் அணி சிஎஸ்கே அணியிலிருந்து அனுபவ ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனைத் தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. சஞ்சு சாம்சன் 2013ல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். ராஜஸ்தான் அணிக்குத் தடை விதிக்கப்பட்ட 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் மட்டுமே சாம்சன் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தார். மொத்தத்தில், சஞ்சு 13 சீசன்களில் 11 சீசன்களை ராஜஸ்தான் அணிக்காகக் கழித்து, அந்த அணிக்காக 149 போட்டிகளில் விளையாடியுள்ளார்.