Asia Cup Scenario: இலங்கையை தோற்கடித்தும் பாகிஸ்தான் சந்தேகம்.. இறுதிப் போட்டியை இன்னும் உறுதி செய்யாத நிலை..!

Pakistan vs Sri Lanka Super 4 Match: இலங்கைக்கு எதிரான வெற்றியின் மூலம், பாகிஸ்தான் சூப்பர் 4 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தலா 2 புள்ளிகளுடன் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சமன் செய்துள்ளது. ஆனால் நிகர ரன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசத்தை விட இந்திய அணி +0.689 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Asia Cup Scenario: இலங்கையை தோற்கடித்தும் பாகிஸ்தான் சந்தேகம்.. இறுதிப் போட்டியை இன்னும் உறுதி செய்யாத நிலை..!

இலங்கை - பாகிஸ்தான்

Published: 

24 Sep 2025 11:34 AM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) லீக் ஸ்டேஜ் போட்டிகளில் 3 போட்டிகளில் விளையாடி இலங்கை அணி அற்புதமாக செயல்பட்டு 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால. சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி (Srilanka Cricket Team) சூப்பர்-4 சுற்றை எட்டியவுடன் அவர்களின் அதிர்ஷ்டம் மாறியது. இலங்கை அணி சூப்பர்-4 இல் தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது. இப்போது, ​​இலங்கை இறுதிப் போட்டிக்கு வர மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான அபார வெற்றி இருந்தபோதிலும், பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியை உறுதி செய்யவில்லை. இதற்காக, சூப்பர்-4ல் நான்காவது அணியாக இடம்பெற்ற வங்கதேசம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுக்க வேண்டியிருக்கும்.

இறுதிப் போட்டிக்கு யார் வர வாய்ப்பு..?

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இன்னும் திறந்தே உள்ளது. இந்தியாவும் வங்கதேசமும் தங்கள் சூப்பர் ஃபோர் தொடரை வெற்றிகளுடன் தொடங்கின. பின்னர், நேற்று அதாவது 2025 செப்டம்பர் 23ம் தேதி, பாகிஸ்தான் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நம்பிக்கையை மீண்டும் பெற்றது.

ALSO READ: Arshdeep Singh: இந்தியாவை கிண்டலடித்த ஹாரிஸ் ரவூப்.. களத்திலேயே பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்!

இந்த முடிவு, 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மற்றொரு போட்டிக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படும் தருவாயில் உள்ளது.

புள்ளிகள் அட்டவணையின் நிலை என்ன?

இலங்கைக்கு எதிரான வெற்றியின் மூலம், பாகிஸ்தான் சூப்பர் 4 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தலா 2 புள்ளிகளுடன் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சமன் செய்துள்ளது. ஆனால் நிகர ரன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசத்தை விட இந்திய அணி +0.689 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் +0.226 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் வங்கதேசம் +0.121 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இலங்கை அணி தனது இரண்டு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறத் தவறியதால், வெளியேற்றத்தின் விளிம்பில் உள்ளது.

இறுதிப் போட்டியை அடைவதற்கான சமன்பாடு என்ன?

4வது சூப்பர் ஃபோர் போட்டி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் . இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை தோற்கடித்தால், இலங்கை போட்டியிலிருந்து வெளியேற்றப்படும். மேலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தைப் பிடிக்கும். இந்த சூழ்நிலையில், செப்டம்பர் 25ம் தேதியான நாளை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டி கிட்டத்தட்ட அரையிறுதியைப் போன்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ALSO READ: IND vs BAN: ஆசியக் கோப்பை.. சூப்பர் 4ல் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!

மறுபுறம், வங்கதேசம் இந்திய அணியை தோற்கடித்தால், சூப்பர் ஃபோர் போட்டி கதவு இன்னும் திறந்திருக்கும். இதனால் 4 அணிகளும் இன்னும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றிருக்கும். இதற்கிடையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற பாகிஸ்தான் மற்றும் இந்தியா தங்களது இறுதி சூப்பர் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் வங்கதேசம் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும். இலங்கை தனது இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடுவதால், இலங்கையின் நம்பிக்கையும் உயிருடன் இருக்கும்.

 

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..