மத்திய பிரதேச (Madhya Pradesh) மாநிலம் இந்தூர் நகரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி (Raja Raghuvanshi) கடந்த 2025, மே மாதம் தனது மனைவி சோனத்துடன் மேகாலயாவில் (Meghalaya) ஹனிமூனுக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், ராஜாவின் மனைவி சோனா (25) மற்றும் அவளுடைய காதலன் ராஜ் குஷ்வாஹா (20) ஆகியோர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் விசாரணைக்கு உட்பட்ட விஷால்ல் சௌஹான், ஆகாஷ் ராஜ்புத், ஆனந்த் குர்மி ஆகியோர் கூலிப்படையினர் என நம்பப்பட்டது. ஆனால், அவர்கள் ராஜ் குஷ்வாஹாவின் நண்பர்கள் என போலீசாருக்கு பின்னர் தெரிய வந்தது. இந்த நிலையில் இந்தியா டுடேவில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய வெட்டுக்கத்தியை தற்போது சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயதம் மீட்பு
மேகாலாயாவில் கொலை நடந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் கொலைக்காக பயன்படுத்திய கத்தியை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மேலும் பல உண்மைகள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ் குஷ்வாஹாவின் நண்பர்கள் அசாமில் உள்ள குவாஹாட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடையிலிருந்து இந்த கத்தி போன்ற ஆயுதத்தை வாங்கியுள்ளனர். முன்னதாக கொலைக்கான ஆயுதம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கியதாக கூறப்பட்டது. இந்த ஆயுதத்தை பயன்படுத்தி ராஜாவை பல முறை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் போது ராஜா தன்னை காப்பாற்ற கடினமாக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.




நடந்தது என்ன?
கடந்த மே 11,2025 அன்று இந்தூரில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனா இருவரும், மே 21,2025 அன்று மேகாலயாவிற்கு ஹனிமூனுக்குச் சென்றனர். இந்த நிலையில் கடந்த மே 23, 2025 அன்று இருவரும் சோஹ்ரா (செராப்புஞ்சி) பகுதிக்கு சென்றபோது காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஜூன் 2, 2025 அன்று ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சோனா, உத்தரப்பிரதேசத்தின் ஷாஜிபூரில் இருந்து கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, தாம் திட்டமிட்டு ராஜாவை கொலை செய்ததாகவும், அதில் காதலன் மற்றும் அவரது நண்பர்களும் ஈடுபட்டிருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
திருமணத்தின் 10 நாட்களில் திட்டமிடப்பட்ட கொலை
மே 11 அன்று இந்தூரில் திருமணம் முடித்த ராஜா மற்றும் சோனா ஜோடி, மே 21 அன்று மெகாலயாவிற்கு ஹனிமூனுக்குச் சென்றனர். அவர்கள் கிளம்பிய அதே நாளில் ராஜ் குஷ்வாஹாவின் நண்பர்கள் திட்டமிட்டபடி மேகாலயா சென்றிருக்கின்றனர். திட்டத்தின் படி சோனம் தனது கனவரை சோஹ்ரா என்ற வனப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கே அவர்களை பின் தொடர்ந்த ராஜ் குஷ்வாஹாவின் நண்பர்கள் அவரை கொலை செய்திருக்கின்றனர்.
சோனமிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை
VIDEO | Raja Raghuvanshi Murder Case: Visuals from the Meghalaya Institute of Mental Health & Neuro Sciences, where the accused Sonam Raghuvanshi was brought for evaluation.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/cw0mnkbjL3
— Press Trust of India (@PTI_News) June 16, 2025
தற்போது அனைத்து குற்றவாளிகளிடமும் மேகாலயா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜாவின் மூத்த சகோதரர், சோனாவின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகவும் எனவே அவர்களுக்கும் மயக்கவியல் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த கொலை வழக்கில் இன்னும் பலர் தொடர்புடையிருப்பது போல் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.