பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடி – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பதிவு
PM Modi's Message On Op Sindoor Anniversary : 2025, மே 7ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அமைந்துள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தொடர் தாக்குதல்கள் மூலம் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த நாள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
ஓராண்டுக்கு முன்பு, ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கையின்போது நமது ஆயுதப் படைகள் ஈடு இணையற்ற துணிச்சலையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தின. பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நமது படைகளின் வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் வணக்கம் செலுத்துகிறது. ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது.
அது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறனையும், தயார்நிலையையும், ஒருங்கிணைந்த வலிமையையும் எடுத்துக்காட்டியது. அதே நேரத்தில், அது நமது படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியதுடன், பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான இந்தியாவின் தேடல் நமது தேசியப் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்துள்ள வலிமையையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. இன்று, ஓராண்டுக்குப் பிறகு, பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான நமது உறுதியில் முன்பைப் போலவே நாம் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிவு
A year ago, our armed forces displayed unparalleled courage, precision and resolve during #OperationSindoor. They gave a fitting response to those who dared to attack innocent Indians at Pahalgam. The entire nation salutes our forces for their valour.
Operation Sindoor reflected…
— Narendra Modi (@narendramodi) May 7, 2026
ஆபரேஷன் சிந்துர்
2025, மே 6-7 தேதிகளில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் தேசம் முழுவதும் துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரவில், பஹல்காம் மனைவியர் மீது அழிக்கப்பட்ட சிந்துரத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கின.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மே 10 ஆம் தேதி வரை பதிலடி கொடுக்க முயன்றது, ஆனால் இந்தியாவிற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. இந்த நடவடிக்கை, உலகிற்கு இந்தியாவின் வலிமையை நிரூபித்தது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு ஒரு சிறு அடியைக் கூட கொடுக்காமல் அணு ஆயுதம் ஏந்திய ஒரு நாட்டைத் தாக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது