Corona Virus : உருமாறிய கொரோனா வைரஸுக்கு கண்காணிப்பு அவசியம்.. ICMR முன்னாள் தலைவர்!
New COVID Variant Spreading in India | உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து கண்காணிப்பு தேவை என்று ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, ஜூன் 12 : இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் (Corona Virus) குறித்து கண்கானிப்புடன் இருப்பது அவசியம் என ஐ.சி.எம்.ஆர் (ICMR – Indian Council of Medical Research) முன்னாள் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்த புதிக வகை கொரோனா வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் அதிகமாக உள்ளதாகவும், இதன் காரணமாக இது மிக தீவிர பாதிப்பாகவும் கருதப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஐசிஎம்ஆர் கூறியது என்ன, இந்தியாவின் தற்போதைய கொரோனா பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கிய கொரோனா வைரஸ்
2019 ஆம் ஆண்டு ஊகான் மாகாணத்தில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ், படிப்படியாக உலகம் முழுவதும் பறவ தொடங்கியது. இதன் காரணமாக உலகம் கடும் சவால்களை சந்தித்தது. கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிர் இழந்தனர். இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு கொரோனா காட்டுக்குள் வந்தது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.




இந்தியாவின் தற்போதைய கொரோனா பாதிப்பு
🚨 As Per Ministry Of Health And Family Welfare, active Covid 19 cases in India stood at 7121.
In Past 24 hours more than 300 new cases are reported and 600+ active cases discharged.#Corona #coronavirus #COVID19 #IndiaFightsCorona pic.twitter.com/3gsZMIlrgr— Everyday Pursuits (@evrydaypursuit) June 11, 2025
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ளது. அதன்படி, இந்தியாவில் தற்போது 7,121 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8573 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தான், ஐசிஎம்ஆர் முன்னாள் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், புதிய உருமாறிய கொரோனா எக்ஸ்.எஃப்.ஜி (XFG – ) உருவெடுத்திருப்பது, கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ்-கோவிட்-2 (SARS Covid -2) வரைசின் இயற்கையான பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம் தான் என்று கூறியுள்ளார்.
மனித செல்களுடன் பிணைக்கும் திறனை மேம்படுத்த கூடிய மற்றும் நோய் எதிர்ப்பு பாதுகாப்புகளை தவிர்க்க கூடிய பிறழ்வுகளை அது கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் நோயின் அதிகரித்த தீவிரத்தை குறிக்க தற்போதைய ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்போது கண்காணிப்பு முக்கியம். பீதி அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.