அகமதாபாத் விமான விபத்தில் உயர் பிழைத்த நபர் – சகோதரரின் உடலை சுமந்து செல்லும் உருக்கமான காட்சிகள்

Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 அன்று நடைபெற்ற விமான விபத்தில் ஒருவரைத் தவிர 241 பேரும் பலியாகினர். இந்த நிலையில் விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ்குமார் ரமேஷ் தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவரது உடலை சுமந்து செல்லும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அகமதாபாத் விமான விபத்தில் உயர் பிழைத்த நபர் - சகோதரரின் உடலை சுமந்து செல்லும் உருக்கமான காட்சிகள்

சகோதரரின் உடலை சுமந்து செல்லும் விஷ்வாஸ்குமார் ரமேஷ்

Published: 

18 Jun 2025 17:06 PM

கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் (Ahmedabad) ஏற்பட்ட ஏர் இந்தியா (Air India) விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏர்படுத்தியது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த  விஷ்வாஸ்குமார் ரமேஷ் ( Vishwaskumar Ramesh), தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதோடு, அவரது உடலையும் தானே சுமந்து சென்ற காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் அஜய் ரமேஷின் இறுதிச்சடங்கு டையூவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷ்வாஸ்குமார் ரமேஷ் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, தனது சகோதரரின் உடலை சுமந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. இன்னும் சிகிச்சையில் இருந்து முழுமையாக மீண்டு வராத நிலையிலும் தனது சகோதரருக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்.

விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ்குமார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விமானம் மோதியதும் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து வெளியே வந்த விஸ்வாஸ்குமார் தீக்காயங்களுடன் இருந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை சீரானதையடுத்து அவர் அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரரின் உடலை சுமந்து செல்லும் விஸ்வாஸ்குமார் ரமேஷ் வீடியோ

 

முன்னதாக விமான விபத்தில் பலியான பைலட் சுமீத் சபர்வால்,  பணியாளர் அபர்ணா மகாதிக், மற்றும் பணியாளர் மைதிலி பாட்டீலின் உடல்கள் முறையே மும்பை, ராய்கட் மற்றும் கோரேகான் ஆகிய இடங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்களுகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 190 இறந்தவர்களின் அடையாளம் டிஎன்ஏ சோதனையின் மூலம் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது வரை 159 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

டிஎன்ஏ சோதனையில் அடையாளம் கண்டுபிடிப்பு

 அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்ட AI-171 என்ற ஏர்இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த குறைந்தது 32 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குஜராத் மாநில முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது உடல் குஜராத் மாநில அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.