Sivakarthikeyan : குட் நைட் பட இயக்குநருடன் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
Sivakarthikeyan And Vinayak Chandrasekaran : நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்கள் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்ததாக குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் துணை நடிகராக தனது நடிப்பை தொடங்கி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பான் இந்திய அளவில் வெற்றிபெற்ற படம்தான் அமரன் (Amaran). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராணுவ வீரராக நடித்து அசத்தியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi) மிக முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் மதராஸி (Madharasi) மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) என இரு படங்களிலும் இணைந்தார். இந்த இரு படங்களின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது.
இப்படங்களைத் தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு வெளியான குட் நைட் (Good night) படத்தை இயக்கிய இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் (Vinayak Chandrasekaran) இயக்கத்தில், புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்ட வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் பற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
விநாயக் சந்திரசேகரன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி :
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் SK24 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தபடத்தை ஆரம்பத்தில் டான் பிக்ச்சர் தயாரிக்கவிருந்த நிலையில், தற்போது இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த புதிய படம் குறித்து மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதராஸி திரைப்படம் ஷூட்டிங் :
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகிவரு ம் படம் மதராஸி. இப்படமானது கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நடிகை ருக்மிணி வசந்த் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதராஸி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.