உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்… என்ன நம்பி பாக்கலாம் – குபேரா படம் குறித்து வைரலாகும் தனுஷின் பேச்சு!

Actor Dhanush Speech: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் குபேரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் தனுஷ் பேசியத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... என்ன நம்பி பாக்கலாம் - குபேரா படம் குறித்து வைரலாகும் தனுஷின் பேச்சு!

தனுஷ்

Published: 

18 Jun 2025 10:50 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தனது 51-வது படமான குபேரா பத்திற்காக இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula) உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் உடன் இணைந்து படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தன்னுடைய எதிரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் பேசியது முன்பு வைரலான நிலையில் தற்போது குபேரா படம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் பேசியதாவது ”இந்த குபேரா படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது.

ரொம்ப நல்லா வந்து இருக்கு குபேரா படம். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நான் ரொம்ப கான்ஃபிடண்டா சொல்றேன் என்ன நம்பி நீங்க இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கலாம்” என்று நடிகர் தனுஷ் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் பேச்சு:

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ்:

நடிகர் தனுஷ் இறுதியாக தனது 50-வது படமான ராயான் படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது 51-வது படத்திற்கு தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைகாரனாக நடித்துள்ளார் என்பது படத்திற்கு மேலும் எதிர்பார்பை அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.