அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம்

Angammal Movie Review: தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான ஜானரில் வெளியாக உள்ள படம் அங்கம்மாள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரிவியூ காட்சியைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம்

அங்கம்மாள்

Published: 

03 Dec 2025 21:47 PM

 IST

தமிழ் சினிமாவில் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் அங்கம்மாள். இந்தப் படத்தை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீதா கைலாசம் முன்னணி வேடத்தி நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, பரணி, தென்றல் ரகுநாதன், யாஸ்மின், வினோத் மற்றும் முல்லையரசி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை நஜாய் பிலிம்ஸ் மற்றும்
ஃபிரோ மூவி ஸ்டேஷன் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரிவியூ ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

அங்கமாள் படத்தின் விமர்சனம் இதோ:

இந்தப் படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 4 கொடுக்கும் அளவில் ஒரு வோர்ல்ட் கிளாஸ் படம் இது. ஒரு வலிமையான கிராமப்புறப் பெண்ணின் கதை.. மகன்களுடனான அவளது மோதல்.. மனித உணர்வுகள்.. அருமையான நாடகம்.. கீதா கைலாசம் முன்னணி வேடத்தில் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு எளிமையான மோதலைக் கொண்ட ஒரு அழுத்தமான காலகட்ட கிராமப்புற குடும்ப நாடகம். அங்கம்மாளாக கீதா கைலாசம் அருமையாக நடித்தார். நல்ல கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் மிகவும் இயல்பான நடிப்பு. மீதமுள்ள நடிகர்கள் நல்ல ஆதரவாக இருந்தனர்.

அங்கம்மாள் படத்தில் நடிகை கீதா கைலாசம் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. இந்த கதாப்பாத்திரத்தில் அவர் வாழ்ந்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் நடிகர் சரண் சக்தி உட்பட அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த ஆண்டில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் பெண்களில் ஆடை சுதந்திரம் குறித்து பேசப்பட்டுள்ளது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் சிறப்பாக படத்தை இயக்கி உள்ளார். திரைக்கதை மிகவும் கவிதையாக உள்ளது. நடிகர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது.

Follow Us
Related Stories
Sivakarthikeyan: சூப்பர் ஸ்டாரை முதல் முறை பார்த்த தருணம்.. அவரை பார்க்கும்போது உறைந்து போய்ட்டேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
Ashwath Marimuthu: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
Vadam: விமலின் கிராமத்து கதைக்களம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? வடம் திரைப்படத்தில் விமர்சனங்கள் இதோ!
Texla: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா படத்தில் நடிக்கும் ஜெய்.. பூஜைகளுடன் தொடங்கிய ஷூட்டிங்!
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி