DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது?.. முக்கிய தகவல்!
Second DA Hike For 2025 | ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் (Central and State Government) தங்களின் ஊழியர்களின் நலனுக்காக ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு (DA Hike – Dearness Allowance) வழங்குகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு குறித்து ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு
பொதுவாக மத்திய மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், ஆண்டுக்கு இரண்டாவது முறை ஜூலை மாதத்திலும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும். 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி மாதம் முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது அகவிலைப்படி எப்போது வரும்
2025 ஜனவரி மாதத்தில் மத்திய அரசு உழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மொத்த அகவிலைப்படி உயர்வு 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு 2025 ஜூலை மாதம் முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அகவிலைப்பட்டி எவ்வளவு அதிகரிக்கும்?
2025 ஜனவரி மாதத்தில் AICPI (All India Consumer Price Index) குறியீடு 143.2 ஆகவும், பிப்ரவரியில் 142.8 ஆகவும், மார்ச்சில் 143.0 ஆகவும், ஏப்ரலில் 143.5 சதவீதமாகவும் இருந்தது. 2025 மார்ச் மாதத்தை விடவும் ஏப்ரல் மாதத்தில் 0.5 சதவீத, உயர்த்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 2 முதல் 3 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2025 ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான AICPI குறியீடு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது உயருக் பட்சத்தில் அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை AICPI அதிகரிக்கவில்லை என்றா 2025 ஜனவரியில் உயர்த்தப்பட்டதை போலவே ஜூலையிலும் வெறும் 2 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.