RBI : 500 ரூபாய் நோட்டுக்களை குறைக்க ஆர்பிஐ திட்டம்?.. உண்மை இதுதான்!
RBI Advised to Keep 100 and 200 Rupees in Banks | இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்தியாவின் நிதி பாதுகாப்பு குறித்து அவ்வப்போது பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், ஏடிஎம்களில் வரவு வைக்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏடிஎம் மையங்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அதிகம் வைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு கூறுவது என்ன, 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பபெற்ற இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 10 ரூபாய், 20 ரூபாய், 50, ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் வைத்திருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த ஆர்பிஐ 2,000 ரூபாய் நோட்டுக்களை இனி அச்சிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
வங்கிகளுக்கு உத்தரவிட்ட இந்திய ரிசர்வ் வங்கி
இந்த நிலையில், ஆர்பிஐ மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஏடிஎம் மையங்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அதிகம் வைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள இந்திய ரிசர் வங்கி, செப்டம்பர் 30, 2025-க்குள் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் 75 சதவீதம் வரை 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை வைக்கவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக ஏடிஎம் மையங்களில் 90 சதவீதம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுக்களை குறைக்க ஆர்பிஐ திட்டம்
Is the ₹500 note set to be phased out by 2026? 🤔
A #YouTube video on the YT Channel ‘CAPITAL TV’ (capitaltvind) falsely claims that the RBI will discontinue the circulation of ₹500 notes by March 2026.#PIBFactCheck
✔️@RBI has made NO such announcement.
✔️₹500 notes have… pic.twitter.com/NeJdcc72z2
— PIB Fact Check (@PIBFactCheck) June 3, 2025
2026-க்குள் 500 ரூபாய் நோட்டுக்களை குறைக்க ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பிஐபி உண்மை சரிபார்ப்பு அமைப்பு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து கூறியுள்ள பிஐபி, 500 ரூபாய் நோட்டுக்களை குறைக்கும் எந்த வித திட்டமும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றும், போலி செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.