தலைகீழாக குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று மேலும் ரூ.7,600 சரிந்தது..
Gold price Today: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 2) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.16,800க்கும், சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை, பிப்ரவரி 02: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 2) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.16,800க்கும், சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தங்கம், வெள்ளியின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இதையும் படிக்க: பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் அறிவித்த டாப் 10 அறிவிப்புகள் இவைதான்!
இன்று தங்கம், வெள்ளி விலை சரிவு:
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கும் விற்பனையாகி வருகிறது.
ஒரே மாதத்தில் ரூ.35,000 வரை விலை உயர்வு:
2026 ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெருமளவில் ஆட்டம் காட்டி வந்தது. அதன்படி, கடந்த ஒரே மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.35,000 வரை உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி, இதுவரை வரலாற்றில் இல்லாத உட்சமாக தங்கம் விலை கடந்த ஜனவரி 29ம் தேதி ஒரு கிராம் ரூ.16,800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனையாகி விலை புதிய உச்சத்தை எட்டியது. இதனால், நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறியது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறுக சிறுக தங்கத்தை சேகரிக்க விரும்பிய மக்கள் இதனால் பெரும் கலக்கமடைந்தனர்.
தங்கம் விலை எதனால் உயர்ந்தது?
தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் டாலர் மீது ஐரோப்பிய நாடுகள் வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளதும் இதன் காரணமாக மத்திய வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து தான் தங்கத்தின் மதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!
மீண்டும் குறைந்து வரும் தங்கம் விலை:
இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி முதல் மீண்டும் படிபடியாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் சரிவடைந்தது தான் இந்தியாவில் சில்லறை விற்பனையிலும் இதன் விலை குறைவதற்கு முக்கிய காரணம் என பொருளாதார நிபணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை எட்டி விட்டது என பல்வேறு முதலீட்டாளர்களும் அதில் லாபம் பார்க்கத் தொடங்கினர். இவ்வாறு அதிகமான முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் தங்கம், வெள்ளி விலை சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.