இலங்கையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை.. விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட முடிவு!

Srilanka Flights Diverting To India | இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் திர்த்து வருகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் விமான நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ஆகியவற்றின் காரணமாக இலங்கை விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை.. விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட முடிவு!

கோப்பு புகைப்படம்

Published: 

28 Nov 2025 09:00 AM

 IST

கொழும்பு, நவம்பர் 28 : இலங்கையில் (Srilanka) கடந்த சில நாட்களாக மிக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் 17, 2025 முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு  நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகிய இயற்கை அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட முடிவு செய்துள்ள இலங்கை

இலங்கையில் மிக மோசமான வானிலை காரணமாக அந்த நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி அணுர கருணாதிலகே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இலங்கைக்கு வரக்கூடிய அனைத்து விமானங்களும் வானிலை அவசர நிலை காரணமாக பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனால், இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமான நிலையங்களுக்கு அவை திருப்பி விடப்படும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டைட்டானிக் கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட தங்க கடிகாரம்.. ரூ.20 கோடிக்கு ஏலம் போனது!

ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி

இலங்கையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் நீர் தேங்கி ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பட்டிகலோவா மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பு மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுக் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : டன் டன்னாக தங்கம்.. சத்தமில்லாமல் வாங்கும் சீனா?! எதிர்கால திட்டம் இதுதானா?

இலங்கை கடற் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நவம்பர் 30, 2025 அன்று கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
உடனே வெளியேறுங்கள்… ஈரானில் வன்முறை போராட்டங்கள் தீவிரம் – பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்.. ரஷ்யா கடும் எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?
பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..
ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி.. இந்தியா மீதான வரி 75% ஆக உயருகிறது?
“நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!
அரிய கனிமங்களைப் பாதுகாப்பதே இலக்கு.. G7 கனிமங்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்