வேலூர்: சாலையோர கடையில் வாங்கிய பூரியில் பல்லி: 11 வயது சிறுமி தீவிர சிகிச்சையில் அனுமதி

Vellore Girl Hospitalized: வேலூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி சாலையோரக் கடையில் வாங்கிய பூரியில் உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து மயங்கினார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

வேலூர்: சாலையோர கடையில் வாங்கிய பூரியில் பல்லி: 11 வயது சிறுமி தீவிர சிகிச்சையில் அனுமதி

சாலையோர கடையில் வாங்கிய பூரியில் பல்லி

Published: 

27 May 2025 07:04 AM

வேலூர் மே 27: வேலூர் மாவட்டத்தில் (Vellore district)  11 வயது சிறுமி (11 year old girl) பூரி சாப்பிடும் போது உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி (Lizard in potato masala) இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே மயங்கிய சிறுமி அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு (Intensive care in hospital) அனுமதிக்கப்பட்டார். பூரி வாங்கிய சாலையோர கடை தற்காலிகமாக மூடப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுகாதாரக் குறைவால் ஏற்பட்ட இந்த சம்பவம் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர உணவகங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சாலையோர கடையில் வாங்கிய பூரியில் பல்லி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற துணை ராணுவப் படை வீரர், விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்திருந்தார். காலை நேரத்தில் தனது 11 வயது மகளுக்கு பூரி வாங்கி கொடுக்க குடியாத்தம் அருகே உள்ள சாலையோர உணவுக்கடைக்கு சென்றார். அங்கு வாங்கிய பூரியை சாப்பிடும் போது, அதில் உள்ள உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி இருப்பதை சிறுமி கவனித்துள்ளார்.

11 வயது சிறுமி தீவிர சிகிச்சையில் அனுமதி

அதை பார்த்தவுடன் சிறுமி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் இருந்ததால், உடனடியாக நாகராஜ் தனது மகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவசரமாக சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது, சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

குடியாத்தம் காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பூரி விற்ற சாலையோர கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறை சார்ந்த கண்காணிப்பு தேவை

உணவுப் பாதுகாப்புத் துறையினர் முறையான ஆய்வுகளை செய்து, சுகாதார விதிகளை மீறும் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சாலையோர உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் முறையை கட்டுப்படுத்தி, கட்டாய சுகாதார சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

உணவு வாங்கும் இடம் சுத்தமாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்

கழிவுநீர் அருகில் தயாரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்

பெருமளவில் வாடிக்கையாளர்கள் செல்கின்ற, பரிந்துரைக்கப்படும் கடைகளை தேர்வு செய்ய வேண்டும்

சாலையோர உணவுக்கடைகளில் பெரும்பாலானவை சுகாதார விதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை. தூசும் மாசும் நிறைந்த இடத்தில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சுத்தமற்ற பாத்திரங்கள், பழைய எண்ணெய் மற்றும் திறந்தவெளியில் வைக்கப்படும் உணவுகள் பொதுவாக காணப்படுகின்றன. பூச்சிகள், பல்லிகள் போன்றவை சுற்றி வரும் சூழல் பயத்தை ஏற்படுத்துகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.