வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்து இயக்கம்.. வெளியான அறிவிப்பு
TNSTC Special Buses : வார இறுதி நாட்களை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2025 ஜூன் 20,21,22ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், பிற மாவட்டங்களில் இருந்தும் முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 18 : வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அனைத்து போக்குவரத்தை காட்டிலும், பேருந்து சேவை முக்கியமானதாக கருதப்படுகிறது. பயணிகள் அதிகளவில் பேருந்து சேவை பயன்படுத்தும் வகையில், அதிகமான பேருந்துகளையும் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இருப்பினும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை உள்ளிட்ட நாட்களில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிமாக இருக்கும்.
வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா?
இதனால், இதுபோன்ற நாட்களில் மக்கள் சிரமமின்ற செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




அதாவது, வார இறுதி நாட்களை முன்னிட்டு, 2025 ஜூன் 20 வெள்ளிக்கிழமை, ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை, ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்று கிழமை என மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 2025 ஜூன் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 275 பேருந்துகளும், 2025 ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation… pic.twitter.com/rm6mehCmK0
— ArasuBus (@arasubus) June 18, 2025
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 2025 ஜூன் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 2025 ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளத. மாதாவரத்தில் இருந்து 2025 ஜூன் 20,21ஆம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு (2025 ஜூன் 22ஆம் தேதி) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.