Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு… இனி இப்படி நடக்கக்கூடாது.. என்ன விஷயம்?

TVK Party Bans: சென்னை வில்லிவாக்கத்தில் பேனர் விபத்தில் 70 வயது முதியவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளது. கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர், அனுமதி பெற்று, நீதிமன்ற உத்தரவுகளையும் காவல்துறை வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு… இனி இப்படி நடக்கக்கூடாது.. என்ன விஷயம்?
தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவுImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 25 Jun 2025 09:49 AM

சென்னை ஜூன் 25: சென்னை வில்லிவாக்கத்தில் (Chennai) தமிழக வெற்றிக்கழகம் (Tamilaga Vetri Kazhagam) சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயதான முதியவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க தடை என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் (Leader Vijay) மற்றும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (General Secretary Pussy Anand) கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளை விட்டுள்ளார். எந்த நிகழ்வும் உரிய அனுமதியுடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். கட்சி சார்பில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவதில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேனர் விபத்து – கட்சி கட்டுப்பாடு

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் வைக்கப்பட்ட பேனர் திடீரென சரிந்து விழுந்ததில், 70 வயதுடைய ஒரு முதியவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இனி பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனுமதி இல்லாமல் எதுவும் வேண்டாம்

தவெக நிர்வாகிகளுக்கு வெளியிட்ட அறிக்கையில் புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது: “நம் தலைவரின் அன்பும் கட்டளையும் மனதில் கொண்டு, கழக நிகழ்வுகள் அனைத்தும் அனுமதியுடன், கட்டுப்பாடோடு, பொறுப்புடன் நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுத்தும் பேனர்கள், பதாகைகள் எதையும் கழகம் வைக்கவில்லை. மேலும், அதற்கான ஊக்கம் எதுவும் நல்கப்படுவதில்லை” என்றார்.

நிர்வாகிகளுக்கு தவெக-வின் அன்புக் கட்டளை

நகர பகுதிகளில் பேனர் முற்றிலும் வேண்டாம்

நகர பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சாலையோரங்களில் பேனர்கள் வைப்பது எப்படியான காரணத்திற்கும் இப்போது முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும், காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளும் தெளிவாக உள்ளன என்பதையும், கட்சி வழக்கறிஞர்கள் உதவியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொடிக்கம்பங்கள் மீது நீதிமன்ற எச்சரிக்கை

மேலும், பொதுமக்கள் பயணிக்கும் இடங்களில் கொடிக்கம்பங்களை வைக்கக்கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கொடி நிலைகள் வைக்கப்படக்கூடாது என்றும், 2025 ஜூலை 2க்குள் அவற்றை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.