Tamil Nadu News Live: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி..
Tamil Nadu Breaking News Today 17 August 2025, Live Updates: வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு ஒரு காற்றுதாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 17, 2025) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
3 நாட்கள் விடுமுறையை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து ஆகஸ்ட் 17, 2025 அன்று சென்னை நோக்கி திரும்புகின்றனர். இதனால் உளுந்தூர்பேட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தீபாவளி – ரயில் முன்பதிவு தொடங்கியது
இந்த ஆண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிற நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ரயிலில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஆகஸ்ட் 17, 2025 அன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
-
அன்புமணியின் செயல் மன்னிக்க முடியாதது..
தனிப் பொதுக்குழு அறிவித்து அதில் நாற்காலி போட்டு அந்த நாற்காலிக்கு துண்டு போட்டதும் மருத்துவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என தெரிவித்தது, மருத்துவர் ராமதாஸின் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது முன்வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க
-
அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள்.. நடவடிக்கை எடுக்க பரிந்துரை
பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரை செய்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
-
பாமக கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம்..
ஆகஸ்ட் 17, 2025 தேதியான இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 37 தீர்மானங்கள் உடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் படிக்க..
-
சென்னையில் தொடரும் மிதமான மழை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
-
கோவையில் பதிவான 9 செ.மீ மழை..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 7, சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி..
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றுதாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா இடையே கடலோரப் பகுதிகளை கடக்கக்குக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒட்டுக்கேட்பு கருவி.. கட்சியை அவமதிக்கும் செயல் – அன்புமணிக்கு கண்டனம்..
பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததும், ‘ஐயாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்’ என வேண்டியதும் கட்சியை அவமதிக்கும் செயல். அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொள்வதும் கபட நாடகமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாஸிற்கு மட்டுமே .. பொதுக்குழுவில் தீர்மானம்..
இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது. ராமதாசை தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்தி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
-
பாமக பொதுக்குழு.. தலைவர், நிறுவனர் ராம்தாஸ் தான் என தீர்மானம்..
இன்று திண்டிவனம் அருகே நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், கட்சி நிறுவனர் ராமதாஸை தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு.. அன்புமணிக்கு எதிராக கண்டனம்..
திண்டிவனம் அருகே இன்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணிக்கு எதிராக பாமக ஒருங்கிணைப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பணையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன் அங்கே வாருங்கள். அதற்குரிய கைப்பேசி எண்ணை குறுத்துக் கொள்ளுங்கள் என்றும் கைபேசி எண் கொடுத்தது.இது போன்ற செயல்கள் மூலம் கட்சியை பிளவு படுத்துவதும், குழப்பத்தை ஏற்படுத்துவதும், போன்ற தலைமைக்கு கட்டுப்படாத செயலாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை மாநகராட்சி – போராட்டம் ஏன்?
மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்றும் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனமான அவர் லேண்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் மற்றும் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
-
மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர், அந்த வகையில் நாளை முதல் (ஆகஸ்ட் 18, 2025) 28 கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு மாநகராட்சி வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபடபோவதாக மதுரை தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இது குறித்து பேசிய ஸ்டாலின், ஆளுநர் திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பி வருகிறார். சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பார். இல்லாத திருக்குறளை அச்சிட்டு கொடுப்பார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார். தமிழகத்தில் கல்வி, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகிறார் என்றார்
-
மலிவான அரசியல் – ஆளுநரை விமர்சித்த முக ஸ்டாலின்
தமிழ்த் தாய் வாழ்த்தை மதிக்காதவர் ஆளுநர் ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்து வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ரவி தமிழகத்தில் தான் இருக்க வேண்டும் எனவும் அப்போது தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.
-
திருமாவளவன் பிறந்தநாளன்று சோகம்
திருமாவளவன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நேரத்தில், திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் (78) அவர் இயற்கை எய்தியதாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிற்றனை காலமானது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருமாவளவன் சிற்றன்னை மரணம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அவரது சிற்றன்னை மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து திருமாளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
25 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர்
சிறப்பு சுற்றுலா தொகுப்பு திட்டம் மூலம் மூலம் 25 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பயணம் மேற்கொள்ளலாம். இதற்கான முன்பதிவை மாணவர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். வழக்கமான பயணிகளை போல் இல்லாமல், மாணவர்கள் 7 கிலோ வரை லக்கேஜ்களை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்
-
Srilanka Tour : இலங்கை செல்ல சுற்றுலா சிறப்பு திட்டம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 3 நாட்கள் சுற்றி பார்க்கும் வகையில், சுற்றுலா சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9,999 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5,000 தள்ளுபடியை கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
-
நாகை இலங்கை கப்பல் சேவை ஆஃபர்
நாகை இலங்கை கப்பல் சேவை நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு சுற்றுலா தொகுப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரூ.9,999க்கு இலங்கை செல்லலாம்.
-
டேட்டிங் செயலி மூலமாக தொடர்பு
டேட்டிங் செயலி மூலமாக 30 பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்திற்கு பிறகும் அதனை தொடர்ந்து வந்துள்ளார். ஜோதீஸ்வரி கணவனின் லேப்டாப்பை பரிசோதனை செய்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிய வந்து மனம் உடைந்துள்ளார்.
-
Chennai Crime : திருமணத்தை மீறிய உறவால் தற்கொலை
சென்னையில் தனது கணவன் திருமணத்திற்கு பிறகும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த இளம் மருத்துவர் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை
-
வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்
தற்கொலை செய்து கொண்ட மனைவி, தனது கணவருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். தனியார் வங்கியில் வாங்கி கடனை செலுத்த முடியாததால் நெருக்கடியில் இருந்ததாகவும், என்னை மன்னித்து விடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் முதலீடு
யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்து, கடனில் பெண் சிக்கினார். அந்த பணத்தையும் அவர் கடனாக வாங்கி இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பங்குச்சந்தை நஷ்டம் – பெண் விபரீத முடிவு
சென்னை பல்லவரத்தை சேர்ந்த பெண் பங்குச்சந்தையில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
கூட்டணி அறிவிப்பு வரமா?
2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் விஜய் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சிப்பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகள் பணிகள் குறித்து பேச வாய்ப்பு
-
TVK Meeting : 4 இடங்களில் பார்க்கிங் வசதி
தவெக மாநாட்டிற்காக, 1000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் கொள்கை தலைவர்கள் படங்கள் மற்றும் லேசர் வழியில் தவெக தலைவர் விஜய் புகைப்படங்கள் இடம் பெற உள்ளது. மேலும், 4 இடங்களில் பார்க்கிங் வசதி
-
தவெக மாநாடு – 500 ஏக்கரில் இடம்
வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரை பாரப்பத்தி பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-
TVK Madurai Meeting : தவெக மதுரை மாநாடு அப்டேட்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பார்க்கிங், குடிநீர், உணவு என அனைத்து விதமான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
தள்ளிவைக்கப்பட்ட மாநாடு
பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. நாகாலாந்து ஆளுநர் கணேசன் மறைவை அடுத்து அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புது தேதி வைக்கப்பட்டு அமித்ஷா வருகை திட்டமிடப்பட்டுள்ளது
-
Amit Shah Tamil Nadu Visit : தமிழகம் வரும் அமித்ஷா.. பிளான் என்ன?
நெல்லையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் பாஜக த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்
-
நாள் வாரியாக முன்பதிவு விவரம்
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 22 வரையிலான முன்பதிவு விவரங்களை ரயில்வே அறிவித்துள்ளது. நாள் வாரியாக முன்பதிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
-
Diwali Train Booking : தீபாவளி – ரயில் டிக்கெட்
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று ஆகஸ்ட் 17, 2025 முதல் தொடங்கப்படுகிறது
-
அமலாக்கத்துறை ரெய்டு – மு.க.ஸ்டாலின் பேச்சு
உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்க என்ன பழனிசாமியா என சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரெய்டுக்கெல்லாம் நாங்கள் அச்சப்பட மாட்டோம் என பேச்சு
-
பிளாஸ்டிக் தடை – பக்தர்களுக்கு உத்தரவு
ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழப்பொருட்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இனி கோயில்களுக்கு வரும்போது, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என உத்தரவு
-
பிளாஸ்டிக் தடை – 12 கோயில்கள் என்னென்ன?
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்நாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்
-
12 கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
சுற்றுசூழலை பரமாரிக்கும் விதமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 12 திருக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த அறநிலையத்துறை தடை விதித்தள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாறாக, இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ரயிலில் இறக்கிய நபர் யார்? விசாரணை
மீட்கப்பட்ட குழந்தை, ஆலந்தூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயிலில் குழந்தையை இறக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை
-
அதிகாலை 4.30 மணியளவில் சம்பவம்
ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரோந்து பணியில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சானடோரியம் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை நடைமேடையில் தனியார் சுற்றி திரிந்துள்ளது.
-
ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை
சென்னை சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட 3வயது குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டனர். ரயிலில் பயணித்த நபர், சானடோரியம் ரயில் நிலையத்தில் குழந்தையை இறக்கிவிட்டு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
-
Chennai Rains: சென்னை வானிலை நிலவரம் இன்று
சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம்
-
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தகவல். இதனால் சில இடங்களில் கனமழை இருக்கலாம்.
-
நீலகிரி மற்றும் கோவையில் கனமழை
கேரள எல்லை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Tamil Nadu Weather : தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
Breaking News in Tamil Today 17 August 2025, Live Updates: புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் ஆகஸ்ட் 17, 2025 அன்று பாமக நிறுவனர் ராமதாஸ் ( Ramadoss) தலைமையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிலையில், பொதுக்கூட்டத்தில் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை (Chennai News) தேனாம்பேட்டையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 17, 2025 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படடவிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.எதிர்கட்சித் தலைவரும், அதிகமு பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த பகுகியில் பார்க்கலாம். தீபாவளி (Diwali Update) பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, ரயிலில் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 17, 2025 அன்று முதல் துவங்குகிறது. இப்படியான பல தகவல்களை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க