சாதிவாரி கணக்கெடுப்பு.. ஆலோசனை குழு அமைக்க வலுயுறுத்தல் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

CM MK Stalin Letter: சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதித்து மேம்படுத்த, மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு.. ஆலோசனை குழு அமைக்க வலுயுறுத்தல் - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

கோப்பு புகைப்படம்

Published: 

10 Jan 2026 19:30 PM

 IST

சென்னை, ஜனவரி 10, 2026: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவை வரவேற்றும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதித்து மேம்படுத்த, மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (10.01.2026) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கை: 

தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதன் மூலம், விரிவான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெற முடியும் என்றும், அதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போவதால், ஒன்றிய அரசின் இந்த முடிவை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், இந்த கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாகவும் முதலமைச்சர் நினைவூட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த முடிவு, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூகநீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணர்திறன் மிக்க பணி: கவனம் அவசியம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சாதிய கட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகளை உள்ளடக்கிய, மிகுந்த உணர்திறன் மிக்க செயல்முறை ஆகும். எனவே, இக்கணக்கெடுப்பிற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப் பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும் தெளிவாகவும் வடிவமைக்கப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஆளுநர் இருப்பதையே மறந்து விட்டோம்… அமைச்சர் ரகுபதி!

மாநிலங்களுடன் கலந்தாலோசனை அவசியம்: 

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பொறுப்பாக இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால், வினாப் படிவங்கள் மற்றும் செயல்முறை வழிமுறைகள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஆலோசனை, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் கண்ணோட்டங்களை இணைக்கவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்…தமிழக அரசு அரசாணை வெளியீடு!

ஆலோசனைக் குழு அமைக்க கோரிக்கை: 

  1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்த, மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்க வேண்டும்.

  2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாத்து, சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். தேவையான இடங்களில் முன்னோடி ஆய்வுகள் (Pilot Study) நடத்தி, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கூட்டாட்சியை வலுப்படுத்தும் வரலாற்றுச் செயல்: 

இந்தியப் பிரதமரின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படும் என தாம் நம்புவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பரோடா அணியின் ஆட்டம்...
கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டின் சந்திர கிரகணம் எப்போது? இதன் சிறப்புகள் என்ன?
32 விமானங்கள்... 300 விலையுர்ந்த கார்கள்... 52 தங்கப்படகுகள் - உலகின் பணக்கார மன்னர்