ADMK – BJP Alliance: அமித்ஷாவின் கருத்தே கூட்டணி நிலைப்பாடு.. அண்ணாமலை பேச்சு தனிப்பட்ட கருத்து! தமிழிசை சௌந்தரராஜன்
Tamil Nadu Assembly Election 2026: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா அளித்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது. அதிமுகவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணி உத்தி குறித்தும், அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

சென்னை, ஜூன் 16: தமிழ்நாட்டில் வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) நடைபெறவுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகமும், அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தது. அடுத்த 5 ஆண்டுகள் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை நிர்ணயிக்க, இப்போது முதலே பல கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை விரட்ட, அதிமுக – பாஜக கட்சிகள் (ADMK – BJP Alliance) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) முன்னிலையில் கூட்டணி அமைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, இது பாஜகவின் ஆட்சி என்று தெரிவித்தார். இந்தநிலையில், இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு:
சென்னையில் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன கூறினாரோ, அதுதான் கட்சியின் நிலைப்பாடு. அமித் ஷா சொன்னது என்னவென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி என்று வரும்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு மாதிரியாக அது உருவெடுக்கும். பீகாரில் இது மாதிரியான நிலைப்பாடுதான். அங்கு மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதேமாதிரி, தமிழ்நாடு என்று வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.




இது தேசிய ஜனநாயக கட்சிக்கு புதியது அல்ல, அதன்படி, தமிழ்நாட்டின் வலுவான மற்றும் ஏற்கனவே ஆட்சி செய்த அதிமுகவுடன் இணைந்து பாஜக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்து நடத்தி செல்வார் என்று அமித்ஷாவே சொல்லியிருக்கிறார்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பா..? தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்:
இன்று காலை மரியாதைக்குரிய பாஜகவின் இணை பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் என் இல்லத்திற்கு வந்திருந்தார்கள் நாங்கள் இருவரும் அரசியல் ரீதியாக சில. கருத்துகளை பரிமாறிக் கொண்டோம எப்போதும் போல இது ஒரு சாதாரண சந்திப்பு தான் குறிப்பாக மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களின் 11… pic.twitter.com/IRTX9SadN1
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) June 16, 2025
அதற்காக, மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தலுக்காக பணியாற்ற போகிறார்கள். எனவே, இவற்றை வேறுபாடு செய்வதை, விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அமித்ஷா சொன்னதுதான் கட்சியின் நிலைப்பாடு, அதைதான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறுகிறார். அண்ணாமலை சொன்ன கருத்து, தனது தனிப்பட்ட கருத்து என்று அவரே சொல்லிவிட்டார். அது கட்சியின் கருத்தாக இருந்தால்தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தனிப்பட்ட கருத்திற்கு கட்சி விளக்கம் தரவேண்டியது இல்லை.” என்று தெரிவித்தார்.