சென்னையில் போக்குவரத்து மாற்றம்: ஜூன் 29 முதல் ஒருவழிப் பாதை நடைமுறை

Chennai Traffic Diversion: சென்னையின் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, 2025 ஜூன் 29 முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல சுரங்கப்பாதை வழி தடை செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: ஜூன் 29 முதல் ஒருவழிப் பாதை நடைமுறை

போக்குவரத்து மாற்றம்

Published: 

28 Jun 2025 06:43 AM

 IST

சென்னை ஜூன் 28: சென்னையில் (Chennai) ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை (Reserve Bank of India Tunnel) பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூன் 29, 2025 முதல் அது ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. காமராஜர் சாலையில் இருந்து இராஜாஜி சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் இனி சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் சாலை பணிகள்

சென்னையின் நடுப்பகுதியில் முக்கிய போக்குவரத்து வழியாக பயன்படும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, வரும் ஜூன் 29, 2025 முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் இயங்கும் வாகன போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இந்த மாற்றம், தென்னக இரயில்வே துறையின் சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நடைபெறும் சாலை சீரமைக்கும் பணிகள் காரணமாக ஏற்படுகிறது. இத்தகைய பணிகள் காரணமாக, இருவழிப் போக்குவரத்துடன் இந்த சுரங்கப்பாதையை பராமரிப்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது.

மாற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

2025 ஜூன் 29ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக செயல்படும்.

இந்த சுரங்கப்பாதை வழியாக காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டும் இயக்கப்படும்.

இதனால்கேட்டு இராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு இப்போது செல்ல தடை விதிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கான மாற்றுப் பாதை

இராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் இனி பின்வரும் வழியை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகும் சாலை
  • வடக்கு பக்க கோட்டை சாலை
  • ராஜா அண்ணாமலை மன்றம்
  • முத்துசாமி சாலை
  • டாக்டர் முத்துசாமி பாலம்
  • வாலாஜா சிக்னல்
  • கொடிமரம் சாலை
  • போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்

மாற்றமில்லை என அறிவிக்கப்பட்ட பாதை

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி (இராஜாஜி சாலை வழியாக) செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இவை வழக்கம்போல போர் நினைவு சின்னம் மற்றும் தலைமைச் செயலகம் வழியாக இயங்கலாம்.

போக்குவரத்து காவல்துறையின் வேண்டுகோள்

இந்த புதிய மாற்றங்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்து வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களுக்கு தேவையான முன்கூட்டான திட்டமிடல் செய்து, ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான தற்காலிக மாற்றங்கள் செயல்பாட்டில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பும், ஒழுங்குமுறையும் உறுதி செய்யப்படுவதை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்