Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரிகார பூஜையில் பக்தருக்கு கத்திக்குத்து.. சாமியார் செய்த பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?

Nilgiri Crime News : நீலகிரி மாவட்டத்தில் பரிகார பூஜையில் பக்தரின் நெற்றில் சாமியார் கத்தியால் குத்தியுள்ளார். பரிகார பூஜை என்று கூறி இதுபோன்ற பக்தரின் நெற்றி, தலையில் கத்தியால் குத்தியிருக்கிறார். இதனை அடுத்து, சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிகார பூஜையில் பக்தருக்கு கத்திக்குத்து.. சாமியார் செய்த பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?
கைதான சாமியார்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 09:02 AM

நீலகிரி, ஜூன் 29 : நீலகிரி மாவட்டத்தில் பரிகா பூஜை என்று கூறி, பக்தர் நெற்றியில் சாமியார் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அந்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்நத்வர் சிவக்குமார் (54). இவர் அப்பகுதியில் தான் சாமியார் என சொல்லிக் கொண்டு குறி சொல்லி வருகிறார். மேலும், சில பூஜைகளையும் தனது வீட்டிலேயே அவர் நடத்தி வருகிறார். அதே பகுதீயில் வசித்து வருபவர் 47 வயதான நாகராஜி. இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவரும், சிவக்குமார் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. அவ்வப்போது, சிவக்குமாருக்கு தேவையான உதவிகளை நாகராஜ் செய்து வந்துள்ளார்.

பரிகார பூஜையில் பக்தருக்கு கத்திக்குத்து

இந்த நிலையில், 2025 ஜூன் 27ஆம் தேதி இரவு சிவக்குமார் தனது மதுபானம் வேண்டும் என நாகராஜிடம் கேட்டு இருக்கிறார். அவரும் சிவக்குமாருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். அப்போது, நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கப்பக்கத்தினர் கூறுவதாகவும், இதற்கு பரிகார பூஜை ஒன்று செய்யலாம் எனவும் சிவக்குமார் கூறி இருக்கிறார்.

இந்த பரிகார பூஜைக்கு நாகராஜும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்து, தனது வீட்டிலேயே சிவக்குமார் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பரிகா பூஜையின்போது சிவக் குமார் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, பூஜைக்கு அமர்ந்திருந்த நாகராஜ் மீது திருநீர், குங்குமத்தை வீசி உள்ளார்.

ஒரு கட்டத்தில் நாகராஜின் நெற்றி, தலையில் கத்தியால் குத்தி உள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் அங்கிருந்து அலறி அடித்து, ரத்தம் வடிந்தபடி வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே நாகராஜை மீட்டு குன்னூர் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர்.

சாமியார் கைது

அங்கு அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்திய போலீசார், சாமியார் சிவக் குமாரை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், சிவக்குமார் 20 ஆண்டுகளாக இதுபோன்ற பூஜைகளை செய்து வருவதாகவும், சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூடநம்பிக்கை என்ற பெயரில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மூடநம்பிக்கையால் பலரும் சில விபரீத முடிவுகளையும், கொலைகளும் நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.