ஜூலை 8ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. நெல்லை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
Tirunelveli Local Holiday : திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2025 ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவையொட்டி, 2025 ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி, ஜூன் 30 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2025 ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Tirunelveli Local Holiday) அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple Festival) தேர் திருவிழாவையொட்டி, 2025 ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஜூலை 19ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழா போன்ற விசேஷ தினங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அந்த குறிப்பிட்ட மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2025 ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா 08.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை Local Holiday நாளாக அறிவிக்கப்படுகிறது pic.twitter.com/fDtzD5lRPx
— District Collector, Tirunelveli (@Collectortnv) June 30, 2025
நெல்லையப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 2025 ஜூலை 8ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட நாளில் பொதுத் தேர்வுகள் எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஜூலை 8ஆம் தேதி வழக்கம்போல் நடைபெற இருந்த தேர்வுகள் நடைபெறும். மேலும், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 8ஆம் தேதியான விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 2025 ஜூலை 19ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில் திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் 518வது ஆனிப் பெருத் திருவிழா தேரோட்டம் 2025 ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கொடியேற்றம் 2025 ஜூன் 30ஆம் தேதியான இன்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், அம்பாளுக்கு பிரதான கொடி மரத்தில் பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, கொடி ஏற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.