பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவிக்கும் மூதாட்டி.. கலெக்டரிடம் 4வது முறை மனு.. கோவையில் நடந்த சம்பவம்!
கோவை மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கோரி அப்பகுதியைச் சேர்ந்த 78 வயதான மூதாட்டி நான்கு முறை மனு அளித்துள்ளார். ரூ.15,000 மதிப்பில் ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்களை மூதாட்டி வைத்துள்ளார். ஆனால், அதனை தற்போது மாற்ற முடியாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டதாக மூதாட்டி வருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்தியுள்ளது.

கோவை, ஜூன் 30 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி 4வது முறையாக மனு அளித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துயுள்ளது. மூதாட்டியிடம் ரூ.15,000 மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளார். எனவே, இதனை மாற்றக் கோரி 4 முறை மனு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 79 வயதான தங்கமணி. இவரிடம் ரூ.15,000 மதிப்புக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என மூதாட்டி தங்கமணி நினைத்துள்ளார். மேலும், மூதாட்டி நிதி தேவை இருப்பதால், பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடிவு செய்துள்ளார்.
பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவிக்கும் மூதாட்டி
இது தொடர்பாக, மூதாட்டி தங்கமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 முறை மனு அளித்திருக்கிறார். ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி தங்கமணி, தன்னுடைய பழைய நோட்டுகளை மாற்று தருமாறு கோரிக்கை வைத்தார். மேலும், மனுவும் அளித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மூதாட்டி தங்கமணி, “என்னிடம் ரூ.15,000 மதிப்புள்ள பழையை ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறேன்.
இது மாற்ற நான் முயற்சித்து வருகிறேன். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இதுவரை நான்கு முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால், இந்த பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்று ஆட்சியர் தரப்பில் இருந்து பதில் வந்துவிட்டது. நான் இந்த நோட்டை வைத்து என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.
கலெக்டரிடம் 4வது முறை மனு
2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தால் மாற்ற முடியும் என சொல்கிறார்கள். அது என்னிடம் இல்லை. என்னிடம் ரூ.1000 நோட்டுகள் ஐந்தும், 500 ரூபாய் நோட்டுகள் 20 ஆக உள்ளது. இது மகனின் பணம். நான் வீட்டை சுத்தம் செய்யும்போது இந்த பணம் கிடைத்தது.
இது செல்லுப்படியாகுது என்று கூறுகிறார்கள். ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால் வேலைக்கு செல்ல முடியாது. பென்ஷன் ரூ.1500 வருகிறது. அதில் தான் சாப்பிட்டு இருக்கிறேன். இது மாற்ற முடியாது என்று தெளிவாக சொல்லி விட்டார்கள். அடுத்த முறை நான் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். வேறு வழியில்லை.
ரூ.15000-க்காக உயிரை விட தயாராக இருக்கிறேன். ஏழையின் வயிற்றில் ஏன் அரசு இப்படி அடிக்கிறது. பழைய ரூபாய் நோட்டை ஏரித்து விட சொன்னார்கள். அந்த ரூபாய் நோட்டில் இருப்பவர்கள் சுதந்திர போராட்ட வீரர் காந்தி. அதுக்கு என்னால் தீ வைத்து ஏரிக்க முடியாது. எனக்கு இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என கூறினார்.