Isha Foundation: வருடாந்திர பராமரிப்பு பணிகள்! ஜூலை 2ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை.. ஈஷா அறிவிப்பு..!
Isha Yoga Center Coimbatore Closure: கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தியானலிங்கம், லிங்க பைரவி, ஆதியோகி வளாகங்கள் 2025 ஜூலை 1 அன்று வருடாந்திர பராமரிப்புக்காக மூடப்படும். பக்தர்கள் அன்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஜூலை 2 முதல் வழக்கம் போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். ஈஷா நிறுவனம் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரை (Coimbatore) அடுத்த பூண்டி என்ற பகுதியில் ஈஷா யோகா மையம் (Isha Foundation) இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கோரும், வார நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து சிவனை தரிசித்து செல்வார்கள். அதேநேரத்தில், கோடைக்காலமான மே மாதங்களில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பராமரிப்பு காரணங்களுக்காக (Isha Yoga Maintenance Work) ஈஷா யோகா மையம் ஒரு குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அன்றைய நாளில் பக்தர்கள் யாரும் தரிசிக்க வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த நாட்களில் ஈஷா யோகா மையம் மூடப்பட இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
2025 ஜூலை 1ம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை:
கோயம்புத்தூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து, வருகின்ற 2025 ஜூலை 1ம் தேதி பக்தர்கள் லிங்க பைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது தொடர்பாக சமீபத்தில் ஈஷா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதி யோகியை தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை:
Dhyanalinga and Adiyogi premises will be closed for maintenance on Tuesday, 1 July 2025 at Isha Yoga Center Coimbatore. We apologize for the inconvenience.#IshaFoundation pic.twitter.com/lQHsarHcNu
— Isha Foundation (@ishafoundation) June 25, 2025
இந்த சூழ்நிலையில், வருகின்ற 2025 ஜூலை 1ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அதாவது ஒருநாள் மட்டும் தியானலிங்கம், ஆதியோகி மற்றும் லிங்க பைரவி வளாகங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம். இந்த இடையூறுகளுக்கு மிகவும் வருந்துகிறோம். மேலும், வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.