8 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு அதாவது ஜுன் 29, 2025 முதல் ஜூலை 5, 2025 வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், ஒரிரு இடங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், 29, ஜூன் 2025: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 28 2025 தேதியான நேற்று அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் 39.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் 39 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
8 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எட்டு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தென்மேற்கு பருவமழை ஒரு பக்கம் தொடங்கியிருந்தாலும் வெப்பநிலையின் தாக்கம் என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் 29 ஜூன் 2025 தேதி முதல் ஜூலை 1 2025 தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை என்பது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்த பதிவாக கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலையின் காரணமாக அசௌகரியம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் பெரியவர்கள் வெளியில் செல்லும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும்.
மழைக்கான வாய்ப்பு எப்படி?
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 29, 2025
இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூன் 29 2025 மற்றும் ஜூன் 30 2025 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை ஜூலை 5 20025 வரை தொடரும் ஆகும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9, சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), உபாசி (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி) தலா 5, விருதாச்சலம் (கடலூர்), வால்பாறை (கோயம்புத்தூர்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.