Tamil Nadu CM MK Stalin: எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை.. வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Chennai Valluvar Kottam Reopens: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சிப் பங்கேற்புரிமை குறித்தும், சமூக நீதியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அவரைப் பாராட்டி சிங்கச் சிலை வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், சமூக நீதிக்காகப் போராடும் திமுக அரசை எதிர்க்கும் சக்திகளைக் கண்டித்தார்.

சென்னை, ஜூன் 21: சென்னையில் உள்ள புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை (Valluvar Kottam) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) திறந்து வைத்தார். தொடர்ந்து, உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லாருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள்தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்:
புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இது எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். இது இந்த விழாவிற்கு மட்டுமல்ல, இந்த இடத்திற்காகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். உங்களுக்கு எல்லாம் மாற்றுதிறனாளிகள் என பெயர் வைத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்த இடம் இது. நீங்கள் எல்லாம் இணைந்து எனக்கு பாராட்டு விழா நடத்துவது மகிழ்ச்சியும், மனநிறைவையும் கொடுத்துள்ளது. கலைஞர் கருணாநிதி திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் தீரா பற்றுக்கொண்டவர். திருக்குறளை தூக்கி சுமந்தவர். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்தபோது அரசு கட்டிடங்களில் திருவள்ளுவரின் புகைப்படத்தை வைத்தவர், திருக்குறளை எழுத சொன்னவர், பேருந்துகளில் குறளை வைக்க சொன்னவர். சமத்துவத்தை பரப்பியவருக்கு கன்னியாகுமரியில் வானுயுர சிலை வைத்தவர். அந்த சிலையின் வெள்ளி விழாவை நாம் கொண்டாடினோம்.” என தெரிவித்தார்.




உங்களுக்கு நான் இருக்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி,சமூக நீதியை நிலைநாட்டியதற்காக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்
1/3 pic.twitter.com/KHhyi5wEdU
— TN DIPR (@TNDIPRNEWS) June 21, 2025
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ உங்களுக்கு நான் இருக்கிறேன், இந்த அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை. இது எல்லாருக்குமான ஆட்சி, இது எல்லாரையும் முன்னேற்றுகின்ற ஆட்சி. அதனால்தான், எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லாருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள்தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள். இதையெல்லாம், முறியடிக்க கூடிய தைரியத்தை கொடுப்பது மக்களாகிய நீங்கள்தான்” என்று தெரிவித்தார்.