Edappadi Palaniswami: தாய்மொழி என்பது மிகமிக முக்கியம்.. அமித்ஷாவிற்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமி!
Amit Shah's Comments on English: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆங்கிலத்தின் அதிகப்படியான பயன்பாட்டைக் கண்டித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் இவர்கள் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜூன் 21: இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது பேசிய அமித் ஷா (Home Minister Amit Shah), “இந்தியாவில் உள்ள மக்கள் ஆங்கிலம் பேச வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்திய மொழிகள் நமது அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவை இல்லாமல் நம்மை இந்தியர்கள் என்று அழைக்க முடியாது. ஒருவரின் நாடு, கலாச்சாரம், வரலாறு மற்றும் மதத்தை புரிந்துகொள்ள எந்த வெளிநாட்டு மொழியும் போதுமானதாக இருக்க முடியாது. முழுமையற்ற வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது” என்றார். இந்தநிலையில், ஆங்கிலம் அவமானம் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிற்கு ஆதரவு:
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது, “இது அமித்ஷாவின் தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கும், அந்த அடிப்படையில் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தாய்மொழி முக்கியம் என்றே சொல்லியிருக்கிறார். தாய்மொழி என்பது மிக மிக முக்கியம். தாய் மொழிக்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.




ஆங்கிலம் மொழி குறித்து அமித்ஷா பேசியது என்ன..?
Amit Shah says
“Time not far away when people speaking in English in this country will feel ashamed”
Get a life man! There are a billion issues that need your urgent attention – national security in shambles tops that list
Why do you always divide? Why can’t you ever unite? pic.twitter.com/IpfBCQet4u
— Supriya Shrinate (@SupriyaShrinate) June 19, 2025
இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, “ நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், நினவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் உருவாகம் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு முறை தங்கள் மனதில் முடிவு செய்பவர்களால் மட்டுமே காரியங்களை செய்ய முடியும், மேலும் நம் நாட்டின் மொழிகள் நமது நகைகள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இல்லாமல், நாங்கள் இந்தியர்கள் அல்ல. உங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதத்தை எந்த வெளிநாட்டு மொழிகளிலும் நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.
முழுமையற்ற வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு முழுமையான இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். இந்திய சமூகம் இந்தப் போரில் வெற்றி பெறும் என்றும், நமது மொழிகளைப் பற்றி பெருமைப்படுவதால், நாம் நமது நாட்டை ஆள்வோம், சிந்திப்போம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், உலகை ஆள்வோம் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் யாரும் சந்தேகிக்க தேவையில்லை” என்று தெரிவித்தார்.