Adyar River Encroachments: அடையாறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்! மாற்றாக இலவச வீடு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Chennai Housing Relocation: சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட 593 குடும்பங்களுக்கு 17 லட்சம் மதிப்புள்ள 390 சதுர அடி வீடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இடமாற்றுப்படி ரூ.5000 மற்றும் வாழ்வாதார உதவி ரூ.30,000 ஆகியனவும் வழங்கப்படுகின்றன. இது அடையாறு ஆற்றை புனரமைக்கும் ரூ.1500 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை, மே 21: சென்னையை (Chennai) அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் (Adyar River Encroachments) அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கிருந்தவர்களுக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகள் வழங்கபட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Govt) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பான முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்:
- அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது.
- நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவை தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.
- அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், நாவலூர் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன.
- அடையாறு ஆற்றக்கரையில் உள்ள ஜோதி அம்மாள் நகர், ஜோதி ராமலிங்கம் நகர், சூர்யா நகர், திடீர் நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
- மாற்றப்படும் குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூ. 5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ. 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூ. 30,000, மின்சார இணைப்பு, மின் கட்டணம் ரூ.2,500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கரை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
- உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு முடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நதிநீர்சிரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.