Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென்காசி பேருந்து நடத்துனர் கொலை: கள்ளக்காதல் கொலைக்குக் காரணமா?

Tamil Nadu Bus Conductor Murder:தென்காசியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் வேல்துரை, அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் வீட்டு உரிமையாளர் சுதாகர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம் கொலை வரை சென்றது. வேல்துரையின் கண்டனத்திற்குப் பின், சுதாகர் மற்றும் பேச்சியம்மாள், நண்பர் ஆறுமுகத்துடன் சேர்ந்து திட்டமிட்டு வேல்துரையைக் காரில் மோதி கொலை செய்தனர்.

தென்காசி பேருந்து நடத்துனர் கொலை: கள்ளக்காதல் கொலைக்குக் காரணமா?
திருமணத்தை மீறிய உறவால் பரிதாப முடிவுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 21 May 2025 14:45 PM

தென்காசி மே 21: தென்காசியில் (Tenkasi) வேல்துரை (Veldurai) என்ற அரசு பேருந்து கண்டக்டர் கொலை (Government bus conductor murdered)  செய்யப்பட்டார். அவர் தனது மனைவி பேச்சியம்மாளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவி வீட்டு ஓனர் சுதாகருடன் தகாத உறவில் ஈடுபட்டார். இந்த உறவை அறிந்த வேல்துரை இருவரையும் கண்டித்தார். கோபமடைந்த சுதாகர், பேச்சியம்மாள், நண்பர் ஆறுமுகம் ஆகியோர் கூட்டு சதி திட்டமிட்டு காரில் மோதி வேல்துரையை கொலை செய்தனர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.  வேல்துரையின் கண்டனத்திற்குப் பின், சுதாகர் மற்றும் பேச்சியம்மாள், நண்பர் ஆறுமுகத்துடன் சேர்ந்து திட்டமிட்டு வேல்துரையைக் காரில் மோதி கொலை செய்தனர்.

வாடகை வீட்டு உரிமையாளர் மற்றும் மனைவி இடையேயான கள்ளக்காதல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த வேல்துரை (43), பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா (35) மற்றும் இரு குழந்தைகளுடன் அடைக்கலப்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வேலைக்காக தினமும் பாவூர்சத்திரம் வரை மோட்டார் சைக்கிளில் சென்று, அங்கிருந்து பஸ்சில் பணிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

விபத்து எனத் தோன்றிய மரணம்… பின்னணி விசாரணையில் திருப்பம்

அண்மையில் அதிகாலையில் வேலைக்கு சென்ற வேல்துரையை ஒரு வேகமான கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்த, காரை ஓட்டியவர் பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (36) எனக் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இது விபத்து எனக் கருதப்பட்டாலும், ஆறுமுகம் முரண்பட்ட பதில்கள் அளித்ததால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருமணத்தை மீறிய உறவால் பரிதாப முடிவு… திட்டமிட்ட கொலை

விசாரணையில், வேல்துரை வசித்த வீட்டின் உரிமையாளர் சுதாகர் (41) மற்றும் பேச்சியம்மாள் இடையே ஏற்பட்டிருந்த நெருக்கம், நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதை வேல்துரை அறிந்து, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் மற்றும் பேச்சியம்மாள், வேல்துரையை கொலை செய்ய முடிவு செய்ததாகவும், சுதாகர் தனது நண்பர் ஆறுமுகத்தின் உதவியுடன் காரில் மோதி திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

மூன்று பேரும் கைது – பரபரப்பு

இந்த தகவல்களின் அடிப்படையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சுதாகர், பேச்சியம்மாள் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!...
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?...
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்...
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!...
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?...
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை...