அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி..
Anbumani Ramadoss: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, நேற்று அதாவது ஜூன் 21 2025, அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து, தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வைப்பதற்காக நேரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ஜூன் 21 2025 தேதியான நேற்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை சந்தித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் வரும் ஜூலை 5, 2025 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அழைப்பிதழை கொடுக்க வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டு அருகே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இத்த தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
ஜூலை 5 2024 அன்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் வழக்கம் போல தனது வீட்டிற்கு வெளியே வந்துள்ளார் அப்போது அங்கே சுமார் ஐந்து முதல் ஆறு நபர்கள் அவரை சுற்றி வளைத்து வெட்டி மிகவும் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதற்கான விசாரணை செம்பியம் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
அதில் முதலாவதாக ஆற்காடு சுரேஷ் தம்பி, பொண்ணை பாலு உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரித்தனர் பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் 28 பேர் அடுத்த அடுத்ததாக கைது செய்யப்பட்டனர். கொலை காரணமாக இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றொரு பிரபல ரவுடி சம்பவம் செந்தில் என தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 27 பேர்:
இந்த வழக்கில் முக்கியமாக, பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, திருவேங்கடம் உள்ளிட்டோர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்று கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புமணி ராமதாஸை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி:
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு “நினைவேந்தல் சங்கமம்” வரும் 05-07-2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அழைப்பிதழை திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வழங்கினார். pic.twitter.com/1mdsOQhY4O
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2025
இந்த நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, நேற்று அதாவது ஜூன் 21 2025, அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்துள்ளார். தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் வரும் ஜூலை 5 2025 அன்று அனுசரிக்கப்பட்டும் நிலையில் அந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வைப்பதற்காக நேரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.