AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sabarimala Ayyappa Meet: உலக யாத்திரை மையமாக மாறும் சபரிமலை: ஐயப்ப சங்கமம் குறித்த முழு தகவல்கள்

Global Ayyappa Sangamam event : திருவிதாங்கூர் தேவசம் போர்டு, அதன் பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடும் விதமாக, சபரிமலையை உலக அளவில் ஒரு தெய்வீக, பாரம்பரிய யாத்திரை மையமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பை நதிக்கரையில் 'உலக ஐயப்ப சங்கமம்' ஏற்பாடு செய்துள்ளது.

Sabarimala Ayyappa Meet: உலக யாத்திரை மையமாக மாறும் சபரிமலை: ஐயப்ப சங்கமம் குறித்த முழு தகவல்கள்
சபரிமலை
C Murugadoss
C Murugadoss | Published: 10 Sep 2025 12:59 PM IST

‘உலக ஐயப்ப சங்கமம் உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையின் ஆன்மிக முக்கியத்துவத்தையும், கலாசார ஒற்றுமையையும் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக அமையும். “தத்வமஸி” என்ற உலகளாவிய செய்தியைப் பரப்புவதும், மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் சபரிமலையை உலகளாவிய யாத்திரை மையமாக மாற்றுவதும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பக்தர்களுக்கான விரிவான ஏற்பாடுகள்

  • பம்பையில், 3,000 பேருக்கு இடமளிக்கும் வகையில் ஒரு ஜெர்மன் மாடலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
  • பத்தனம்திட்டா, பெருநாடு, பம்பை, சீதத்தோடு போன்ற இடங்களில் வரவேற்பு குழு அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • பக்தர்களுக்காக மாவட்டம் முழுவதும் தங்குமிடம், கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்து வசதிகள், மற்றும் தரிசன வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • பம்பையிலும் அருகிலுள்ள மருத்துவமனைகளிலும் நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும்.
  • மலைக்கு மேல் வாகனம் நிறுத்துமிடம், தூய்மை மற்றும் பிற அடிப்படை சேவைகளுக்காக தன்னார்வ அமைப்புகளின் உதவியும் இருக்கும்.

சபரிமலையின் எதிர்கால வளர்ச்சி

சங்கத்தின் ஒரு பகுதியாக, சபரிமலையுடன் தொடர்புடைய எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதங்கள் தொடங்கும். ஏற்கனவே, ரூ. 1,300 கோடி மதிப்புள்ள மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை விமான நிலையம் மற்றும் ரயில்வே பாதை போன்ற முக்கிய திட்டங்கள் உயர்தர அளவில் செயல்படுத்தப்படும்.

‘தத்வமஸி’யை அடையாளப்படுத்தும் லோகோ

சங்கத்திற்காக, ஐயப்பன் சுவாமி, மகரஜோதி, சபரிமலை ஆகியவற்றின் உருவங்களைக் கொண்ட ஒரு சிறப்பு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த லோகோ “தத்வமஸி” என்ற செய்தியின் உலகளாவிய பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. சங்கம் என்பது பக்தர்களுக்கும், தேவசம் போர்டு மற்றும் அரசுக்கும் இடையே ஒரு வெளிப்படையான, பயனுள்ள விவாதத்திற்கும், ஆலோசனைகளுக்கும் ஒரு தளமாக அமையும். சபரிமலை தாந்திரி உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாதங்களில், பக்தர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

உலகளாவிய சபரிமலை தரிசனத்திற்கு புதிய வழி

ஆன்மிகத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் சபரிமலை தரிசனத்தை உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், உலக அளவில் சபரிமலையை உயர்த்துவதும் உலக ஐயப்ப சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

Follow Us