AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்லாய் உறுதிகொள்… திருமணத்தில் அம்மி மிதிப்பதன் ரகசியம் என்ன?

Ammi Midhithal Ritual in Tamil Weddings: திருமணத்தில் அம்மி மிதிப்பது என்பது மணப்பெண்ணின் மனத் திடத்தையும், கற்புநெறியையும் உறுதிப்படுத்தும் ஒரு புனிதமான சடங்காகும். வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை ஒரு கல்லைப் போன்ற உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. தேவையற்ற பயம் மற்றும் தீய எண்ணங்களை அகற்றி, இல்லறத்தை நல்வழியில் நடத்த இந்தச் சடங்கு வழிகாட்டுகிறது.

கல்லாய் உறுதிகொள்… திருமணத்தில் அம்மி மிதிப்பதன் ரகசியம் என்ன?
திருமணத்தில் அம்மி மிதிப்பதன் ரகசியம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Apr 2026 14:07 PM IST

தமிழர் கலாச்சாரத் திருமண முறைகளில் சடங்குகள் ஒவ்வொன்றும் ஆழமான வாழ்வியல் தத்துவங்களைக் கொண்டவை. அந்த வகையில், திருமணத்தின் போது அக்னி சாட்சியாக நடைபெறும் ‘அம்மி மிதிக்கும்’ சடங்கு ஒரு பெண்ணின் மன உறுதியையும், குடும்பப் பொறுப்பையும் பறைசாற்றும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. மணமகன் மணமகளின் வலது கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலப்புறம் வைக்கப்பட்டுள்ள அம்மியின் மீது ஏற்றி வைக்கும் இந்த நிகழ்வு, வெறும் சடங்கு மட்டுமல்லாமல் ஒரு வாழ்நாள் உறுதிமொழியாகவும் பார்க்கப்படுகிறது.

மணமகளே நீ இந்த கல்லைப் போல வலிமை மிக்கவளாக இருக்க வேண்டும்

இந்தச் சடங்கின் போது ஓதப்படும் மந்திரங்கள் பெண்ணின் மனவலிமையை வலியுறுத்துகின்றன. “அம்மி போன்ற உறுதியுடன் நீ இருக்க வேண்டும்” என்பது, வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல், ஒரு கல்லைப் போல நிலையான மனதுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒரு குடும்பத்தின் அச்சாணியாக விளங்கும் பெண், இடர் வரும் காலங்களில் நிலைகுலையாமல் இருந்தால் மட்டுமே அந்த இல்லம் சிறப்பாக இருக்கும் என்பதை இந்தத் தத்துவம் உணர்த்துகிறது. மேலும், பகைவர்கள் அல்லது தீய எண்ணம் கொண்டவர்கள் முன் அச்சமின்றி நிமிர்ந்து நிற்கும் துணிவை இது போதிக்கிறது.

உன்னை அழிக்க நினைப்பவர்களின் முன் பயமற்று எதிர்த்து நிற்பாயாக

வாழ்க்கைப் பயணம் என்பது எப்போதும் சீராக இருப்பதில்லை; சந்தேகம், தேவையற்ற கோபம், குரோதம் மற்றும் பயம் போன்றவை மன அமைதியைக் குலைக்க நேரிடும். அத்தகைய நெருக்கடியான தருணங்களில் ஒரு பெண் திடசித்தத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அடிப்படை நோக்கம். குறிப்பாக, ஒரு பெண்ணின் ஒழுக்கமும் கற்புநெறியும் அவளது மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. சபலங்களுக்கு ஆட்படாமல், கற்புநெறியில் உறுதிமிக்கவளாகத் திகழும் பெண், தன் குடும்பத்தை எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையை இந்த அம்மி மிதிக்கும் நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

Also Read: தமிழ்ப் புத்தாண்டில் தவறாமல் சாப்பிட வேண்டிய அறுசுவை உணவுகள்!

திடசிந்தையோடு எதிர்த்து நிற்பதில் தான் வெற்றி இருக்கிறது

இன்றைய நவீன காலத்திலும் இச்சடங்கு கடைபிடிக்கப்படுவதற்கு அதன் பின்னுள்ள உளவியல் காரணங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. திருமணத்திற்குப் பின் ஒரு புதிய சூழலில் நுழையும் பெண்ணுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் ஒரு சடங்காக இது அமைகிறது. மன உறுதியுடன் சவால்களை எதிர்கொள்ளும் போதுதான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்பதை மணமகன் மணமகளுக்கு நினைவூட்டும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்பாட்டையும் வீரத்தையும் ஒருசேரக் கற்றுக்கொடுக்கும் இச்சடங்கு, தமிழ் திருமணங்களின் உன்னதத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது.

Follow Us